கோமல் தாரிணி அவர்கள் தன் தந்தை கோமல் ஸ்வாமிநாதன் அவர்கள் நினைவுநாளில் பல புதிய நாடகங்களை அறிமுகப்படுத்த உள்ளார். இதைப்பற்றிய அறிவிப்பைக் குவிகம் அளவளாவல் நிகழ்ச்சியில் நம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இதோ அதற்கான அறிவிப்பு!
தமிழில் தலைசிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை நாடக வடிவில் தருவதற்கு முன்வந்துள்ளார்.
கல்கி, புதுமைப்பித்தன், தி ஜானகிராமன், சூடாமணி,ஜெயகாந்தன் இவர்களின் கதைகள் நாடகமாக உலாவ வருவது இயல் நாடகம் இரண்டிற்கும் கிடைத்த பொன்னான வாய்ப்பு என்றே கூறவேண்டும்.
இந்த முயற்சிக்குக் குவிகம் தன்னால் முடிந்த உதவியைச் செய்யக் காத்திருக்கிறது!