சமர்த்து..! — நித்யா சங்கர்

 

கைபேசி சிணுங்கியது.

பேப்பர் படித்துக்கொண்டிருந்த கைலாசம் கைபேசியை
எடுத்து அதன் திரையை நோக்கினான்.

தம்பி முகுந்தன்.

கைபேசியைக் காதுக்குக் கொடுத்துக்கொண்டே,
‘சொல்லுடா முகுந்தா…’ என்றான்.

‘……….’

‘அப்படியா ரொம்ப சந்தோஷம்.. நான் போய் அப்பா அம்மாவை ரிஸீவ் செய்துக்கறேன்’ என்று சந்தோஷமாகக்
கூறி கைபேசியை அணைத்தான்.

‘ உமா..உமா… சீக்கிரம் வாயேன்’ என்று சமையலறையை நோக்கிக் கூவினான்.

‘அடாடா… எதுக்கு இப்படிக் கத்தறீங்க..? என்ன ஆச்சு? என்ன விஷயம்?’ என்றபடியே உமா ஹாலுக்கு வந்தாள்.

‘சந்தோஷமா இருக்காதா பின்னே..? முகுந்த் போன் பண்ணினான்.. அப்பா அம்மாவை எர்ணாகுளம் இன்டர்ஸிடியில்
நாளைக்கு ஏற்றி விடுகிறானாம்.. நான் போய் கூட்டிண்டு வரணுமாம்’

‘அப்படியா.. எக்ஸெலன்ட்… என்னங்க, அப்பா அம்மா ஒரு வருஷத்துக்கப்புறம் வராங்க இல்லே… அவங்க ஸ்டே
கம்·பர்டபுளா இருக்கறமாதிரி பார்த்துக்கணும். அவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடணும். நாம
சாப்பிட்டிருக்கிற கொட்டை கொட்டையான ரேஷன் அரிசி வேண்டாங்க… நீங்க போய் நல்ல உயர்ந்த ரக அரிசியா
வாங்கிட்டு வந்திடுங்க… நான் ஸ்பெஷலா ஒரு மளிகை சாமான் லிஸ்ட் போட்டுத் தரேன்.. அதையும் வாங்கிட்டு
வந்துடுங்க. அவங்களைக் கூட்டிட்டு வர டாக்ஸிக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.. நான் படுக்கையெல்லாம் ரெடி பண்ண-
னும்..’ என்றாள் உமா குதூகலத்தோடு.

‘ஸ்டாப்… ஸ்டாப்… விட்டா தாம்தூம் பண்ணிடுவே போலிருக்கே… இதுக்கெல்லாம் பணம் வேண்டாமா.. மாசக்
கடைசி வேறே…’

‘எப்படியோ சமாளிக்க வேண்டியதுதான்.. மாதா மாதம் நீங்க வீட்டுச் செலவுக்குத் தர பணத்துலே கொஞ்சம்
சேமித்து வெச்சிருக்கேன். போதாதற்கு யார்கிட்டேயாவது கைமாத்து வாங்குங்க… அடுத்த மாதம் திருப்பிடலாம்..
அவர்களுக்கும் உங்க தங்கை பூரணிக்கும் ஜவுளியும் எடுத்துக் கொடுத்தனுப்பணும்…’

‘இட் ஈஸ் டூ மச்.. கொஞ்சம் நிதானமா இரு..’

அவள் கூறுகின்ற செலவினங்களுக்கான லிஸ்டைக் கேட்டுப் பயந்தாலும், கைலாசத்துக்கு அவளை நினைத்துச்
சிறிது பெருமையாக இருந்தது. மாமனார், மாமியார் வருகிறார்கள் என்றாலே முகத்தைச் சுளிக்கும் இந்தக் காலத்து
மருமகள்கள் நடுவிலே இப்படி ஒரு மருமகளா..? மாமனார், மாமியார், நாத்தனாரிடம் எத்தனை அன்பு வைத்திருக்கிறாள்..!

கைலாசமும், அப்பாவும், அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உமா பரிமாறிக் கொண்டிருந்தாள்.

‘இப்படீங்கறதுக்குள்ளே பதினைந்து நாள் ஓடிடிச்சு. நாளைக்கு ஊருக்கு கிளம்பிட்டிருக்கீங்க.. பதினைந்து நாளும்
கலகலப்பா இருந்தது. நாளைக்கு வீடெல்லாம் வெறிச்சோடிக்கிடக்கும்.’ என்றாள் உமா.

‘ஆமாம் உமா… எங்களுக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. என்ன செய்யறது..? பூரணி அங்கே ஊர்லே தனியே
சமையலையும் பார்த்துண்டு வேலைக்கும் போய்ட்டு இருக்காளே.. ‘என்றாள் அம்மா.

‘ஒண்ணு சொல்றேன் உமா… உன் கைப் பக்குவமே தனி. இந்தப் பதினஞ்சு நாளும் ரொம்ப சுவையா. விதவிதமாச்
சாப்பிட்டோம். அதுவும் நீ ஆசையாபண்ணி அன்போடு போட்டது சாப்பாட்டின் சுவையை ஒரு படி அதிகமாகவே
ஆக்கிடுத்து…’ என்றார் அப்பா ரொம்ப சந்தோஷத்தோடு திருப்தியாக.

‘சும்மா என் சமாதானத்துக்காகச் சொல்லாதீங்க அப்பா.. மீராவின் சமையலை விடவா என் சமையல் ருசியாக இருந்-
தது..?’

‘இல்லேம்மா.. நான் நிஜமாத்தான் சொல்றேன்..’என்று சில விநாடிகள் நிதானித்தவர், ‘டேய்..கைலாசம்.. நாம எல்லோரும்
முகுந்த் நல்லா சௌகரியமா இருக்கான்னு நினச்சிட்டிருக்கோம். ஆனா பத்துநாள் அவன் வீட்டிலே இருந்ததுலே
எனக்கு அப்படித் தோணலே.. நாங்க அவன் ஊர்லே போய் இறங்கியதும்.. டாக்ஸி வேண்டாம்.. அட்லீஸ்ட் ஆட்டொவிலேயாவது வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவான்னு நெனச்சோம். பஸ்ஸ¤க்காக அரைமணி நேரம் காத்திருந்து பஸ்ஸ¤லே கூட்டிட்டுப் போனான்…மீரா நல்லா சமைக்கிறாள்.. சரிதான்.. ஆனா சாதம் நல்லா இருந்தாத்தானே சாப்பாடு ருசிக்கும். கொட்டை கொட்டையா ரேஷன் அரிசியிலே சாப்பாடு. பின் எப்படி சுவையா இருக்கும்.. ஸோ.. நாம நினைக்கற மாதிரி இல்லே.. அவன் ·பினான்ஷியலா சௌகரியமா இல்லேன்னு நினைக்கறேன்.. இங்கே பார்.. நீங்க உயர்ந்த ரக அரிசியை யூஸ் பண்ணிட்டிருக்கீங்க.. சாதமும்  நல்லா வருது.. சாப்பாடும் ருசியா இருக்கு.. நீயும் அவன்கிட்டே பேசி மெதுவா விசாரி. நாம ஏதாவது செய்யணும்..’ என்றார் அப்பா.

துணுக்குற்று கைலாசமும், உமாவும் ஒருவர் முகத்தை  ஒருவர் குழப்பமாகப் பார்த்துக்கொண்டனர். ‘முகுந்தன்
நல்ல வேலையில்தானே இருக்கிறான்.. நல்லா சம்பாதித்துக்கொண்டுதானே இருக்கிறான்.. பின் ஏன் இப்படி..?’ புரியவில்லை அவர்களுக்கு.

‘கைலாசம்.. அப்புறம் முக்கியமா ஒரு விஷயம்.. பூரணிக்குக் கல்யாணத்திற்கு வரன் பார்த்துட்டிருக்கேன். சில
வரன்கள் பக்கத்துலே வந்துருக்கு. நான் ஒரிஜினலா நீங்க ரெண்டுபேரும் சம்பாதிக்கறீங்கங்கற தைரியத்துலே ஒரு
பதினைந்து லட்சம் பட்ஜெட் போட்டிருந்தேன். இப்போ  உங்க ரெண்டுபேர் நெலமையையும் பார்த்தா ஏழு.. எட்டு
லட்சத்துக்குமேல் முடியாது போலிருக்கு. அதுபடி நான் பட்ஜெட்டை ரீவர்க் பண்ணனும். இப்போ உள்ள நெலமையிலே முகுந்த் அவ்வளவா கான்ட்ரிபியூட் பண்ணமுடியும்னு தோணலே… நீதான் மேஜர்பார்ட் செலவை ஏத்துக்கணும்..’ என்று கூறியபடியே கைகழுவ போனார். அம்மாவும் எழுந்து கூடப்போனாள்.

‘மை காட்… உமா இப்போ என்னடி பண்ணறது..?’

‘உங்க ஒரே தங்கச்சி.. அருமைத் தங்கச்சி.. செய்யத்தானுங்க வேணும். எப்படியோ சமாளிக்கலாம்.. யோசிப்போம்..’ என்றாள் உமா ஆறுதலாக.

கைபேசியை அணைத்துவிட்டு வாய்விட்டுச் சிரித்தான் முகுந்தன்.

ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்த மீரா, ‘எதுக்கு இப்படிச் சிரிக்கிறிங்க..?’ என்றாள்.

‘விஷயத்தைச் சொன்னா நீயும் சிரிப்பே.. அண்ணா ·போன் பண்ணி இருந்தான். அப்பாவும், அம்மாவும்
இன்னிக்குக் கிளம்பி ஊருக்குப் போனாங்களாம். அப்பா பூரணிக்கு வரன் பார்த்துட்டிருக்காராம். நாங்க ரெண்டுபேரும்
சம்பாதிச்சிட்டிருக்கோம்ங்கற நம்பிக்கையிலே பதினைந்து லட்சம் பட்ஜெட் போட்டிருந்தாராம். இங்கே வந்து நெலமையைப் பார்த்தப்புறம் அவ்வளவு தேறாது. அதனாலே எட்டு லட்சத்துக்குள்ளே பட்ஜெட்டைக் கொறச்சுக்கலாம்னு இருக்காராம்.. பார்த்ததுலே எங்க ரெண்டுபேர்லே நான் ரொம்ப கஷ்டத்துலே இருக்கேனாம்.. அதனாலே அண்ணாதான் மேஜர்பார்ட் செலவை ஏத்துக்கணும்னு சொல்லியிருக்காராம்’ என்று சிரித்தான் முகுந்தன்.

‘எனக்கு அவமானமா இருக்கு. நாம ரொம்ப மோசமான நிலைமையிலே இருக்கோம்னு ஒரு இம்ப்ரெஷனைக் கிரியேட்
பண்ணிட்டீங்களே.. அதுவும் நம்ம எவ்வளவு நல்ல அரிசி வாங்கி நார்மலா சமைக்கிறோம்..அதை விட்டுவிட்டு ரேஷன்
அரிசி வாங்கி சமைச்சுப்போட்டு.. சேச்சே..’ என்றாள் மீரா.

‘போடி.. அசடு.. எல்லாம் ஒரு காரணமாகத்தான், நீ அப்ஜெக்ட் பண்ணியும் அப்படிச் செய்தேன். நீ சொன்னபடி
நாம தாம்தூம்னு இருந்திருந்தா கல்யாண பட்ஜெட் பதினைந்துலேருந்து இருபத்தஞ்சு ஆகி இருக்கும்…’ என்றான்
முகுந்தன் சிரித்தபடியே.

‘இருக்கட்டுமே… ஒரே தங்கச்சி.. நல்லா பிரமாதமா ஜாம்ஜாம்னு கல்யாணம் நடத்தி இருக்கலாமே..’

‘மீரா.. எமோஷனலா அகலக் கால் வெச்சோம்னா மூவாயிரம் ரூபாய் செலவு பண்ணவேண்டிய இடத்துலே
முப்பதாயிரம் ரூபாய் செலவு செய்யத் தோணும். அங்கேயும் இங்கேயும் அளவுக்கதிகமா கடன் வாங்கிச் செஞ்சோம்னா
அப்புறம் கஷ்டம் நமக்கு எல்லோர்க்கும்தானே..’

‘அப்போ தங்கைக்கு.. அஸ் எ பிரதர் தாம்தூம்னு கல்யாணம் பண்ணனும்னு ஆசையில்லையா உங்களுக்கு..’

‘டெபனட்லி… ஆனா வீ மஸ்ட் ஹவ் எ லிமிட்..  கல்யாணம்ங்கறது ஜாம்ஜாம்னு ஐந்து லட்சம் ரூபாயிலும்
பண்ணலாம்.. ஐம்பது லட்சம் ரூபாயிலும் பண்ணலாம். பட் அகலக் கால் வைக்காம நம்ம சக்திக்கு உட்பட்ட வகையிலே
கல்யாணத்தை ஜாம்ஜாம்னு ஒரு குறையும் இல்லாம நடத்தலாம். அப்பா எட்டு லட்சம் பட்ஜெட் போட்டிருக்கார்.
கல்யாணம்ங்கறதாலே அது பத்துலே வந்து நிற்கலாம். அதை ஈஸியா சமாளிச்சுக்கலாம். அண்ணா முடிஞ்சதைக் கொடுக்கட்டும். மீதியை நாம் காண்ட்ரிபியூட் பண்ணுவோம்.. ஓகே சந்தோஷம்தானே…’

ஒரு நிமிடம் பெருமைபொங்க அவனைப் பார்த்தாள் மீரா. பின்னர் ‘ஸோ ஸ்வீட் ..சமர்த்து..’ என்று அவன் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.