தமிழ் நாட்டுக்கு இன்றைக்கு என்ன தேவை?
ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் ஊழல் இல்லாத அரசு !
தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி என்று சொல்வார்களே , அதுபோல எந்தத் துறையைத் தொட்டாலும் அதில் ஊழல் !
புரையோடிய புண்ணாகிவிட்டது ஊழல் !
மேல்மட்டம் முதல் அடித்தளம்வரை விரிந்து பரந்து கிடக்கிறது இந்த ஊழல் சாம்ராஜ்யம்!
பிரசவ ஆஸ்பத்திரி முதல் மயானம்வரை ஒவ்வொரு படியிலும் ஊழல் நெடி!
அரசியல், ஆன்மீகம், இசை, ஈடு, உதவி, ஊடகம், எழுத்து, ஏடு, ஐஸ்வரியம், ஒழுக்கம், ஓட்டு, ஔடதம் ,என்ற அனைத்து உயிர்த் துறைகளும் ஊழலில் ஊறிய மட்டைகளாக இருக்கின்றன.
மெய்யெழுத்து பொய்யெழுத்துக்களாகிவிட்டன.
உயிர்மெய் உயிர்வதையாகிவிட்டன.
ஆயுதம் காப்பதற்குப்பதிலாக அழித்து வருகிறது.
பயிருக்கு நடுவே களையிருந்தால் பிடுங்கலாம்; களையையே பயிராக வளர்த்தால் நாடு தாங்குமா?
இளைய சமுதாயமே! நீ பொங்கிவா! புயலாய் மாறிவா!
நீ நினைத்தால்தான் இந்த ஊழல் என்னும் நச்சுக் கொடியை வேரோடு வெட்டிச் சாய்க்கமுடியும்.
தம்பி வா! தலைமை ஏற்க வா!
ஊழல் செய்வது அண்ணனாக இருந்தாலும் அன்னையாக இருந்தாலும் அப்பனாக இருந்தாலும் அக்காவாக இருந்தாலும் அனைவரையும் எதிர்த்துப் போராடு!
அவர்களைத் திருத்திவிடு ! இல்லையேல் ……………………………