ஓவியன் தூரிகை
வண்ணத்தில் மூழ்கி
வண்ண ஓவியமானது !
வீணையின் தந்திகளில்
விரல்கள் உறவாடி
இன்னிசையானது !
கவிஞன் எழுதுகோல்
வார்த்தையுடன் விளையாடி
இனிய கவிதையானது !
கடல் அலைகள் மேகத்தில்
கலந்து பேசி உறவாடி
கொட்டும் மழையானது!
விண்ணில் சிறகடித்து
ஒற்றைச் சிறகோடு
சுற்றிய வெண்புறா
‘வன்முறைக்கு விடை கொடு
அன்புக்கு இடம் கொடு
உண்மைக்கு உயிர் கொடு
அமைதிக்கு கை கொடு ‘
மௌனமாகப் பேசி
மண்ணுலகில்
சமாதானச் சின்னமானது !