
இவற்றைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளுக்கு ரூ.250 பரிசு வழங்கப்படும்.
பரிசு பெற்ற கதைகள் குவிகம் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்படும்.
அத்துடன் அவை குவிகம் மின்னிதழிலும் வெளியாகும்.
பரிசளிப்பு விழா ஜனவரி 2019 இல் நடைபெறும்.
நிபந்தனைகள்:
கதை ஆசிரியரின் சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும்.
பத்திரிகைகள், மின்னிதழ்கள், ஏனைய சமூக வலைத் தளங்களில் இந்தக் கதை வந்ததில்லை என்றும், போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்வரை, வேறுஎந்தப் பத்திரிகைக்கும் அனுப்ப மாட்டேன் என்றும் கதைக்கான முழுப்பொறுப்பையும் படைப்பாளி என்ற முறையில் நானே ஏற்கிறேன் என்றும்,கதைப் பெயர் குறிப்பிட்டு, பொறுப்புக் கடிதம் ஒன்றையும் கூடவே அனுப்பவேண்டும்.
கதையை தட்டச்சு செய்து மின்னஞ்சலில் இணைப்பாக மட்டுமேஅனுப்பவேண்டும்.
A- 4 அளவில் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பவேண்டும்.
கதை அனுப்புவோர் தங்கள் பெயர், விலாசம், மின்னஞ்சல், அலைபேசி எண் இவற்றைத் தவறாமல் குறிப்பிடவேண்டும்.
கதையுடன் கதாசிரியரின் சுய விவரங்களையும், புகைப் படத்தையும் அனுப்புதல் நலம்.
கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: நவம்பர் 15, 2018
கதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் magazinekuvikam@gmail.com