சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, பெண்கள் – குறிப்பாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற வாதத்தை முன்வைத்து உச்சநீதி மன்றத்தில் இளம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 2006இல் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையலாம் என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
அதேசமயம், இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதி ‘‘ஆழமான மத உணர்வுகளைக் கொண்ட வழிபாட்டு உரிமையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் அறிவுபூர்வமான வாதங்களை நுழைத்துப் பார்ப்பது ஏற்புடையதல்ல’’ எனக் கூறினார்.
நான்குக்கு ஒன்று என்ற விகிதத்தில் சபரி மலை கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு ஆனது.
இது தவறான தீர்ப்பு என்று சொல்பவர்களின் முக்கிய கருத்து:
– மத விவகாரத்தில் அரசோ நீதிமன்றமோ தலையிடக்கூடாது.
– முஸ்லீம் போன்ற மற்ற மதங்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா?
– கோவிலுக்கென்று விதிக்கப்பட்ட சில ஆகமங்கள் போற்றப்படவேண்டும்.
– ஜல்லிக்கட்டு தீர்ப்புபோல் இதுவும் மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.
– பெண்களின் மாதவிடாய் நைஷ்டிக பிரம்மச்சாரி விரதத்திற்கு விரோதம்.
இது சரியான தீர்ப்பு என்று சொல்பவர்களின் முக்கியக் கருத்து:
– ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம்
– கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
– உலகில் உள்ள மற்ற எல்லா ஐயப்பன் கோவில்களிலும் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
– சபரிமலை கோவிலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்ற தடைஉத்தரவு 1950 களில்தான் பிறப்பிக்கப்பட்டது.
– சம்பிரதாயங்களும் வழக்கங்களும் காலத்திற்கு ஏற்றவாறு மாறவேண்டும்
குணத்தைப் பார்த்து , குத்றத்தைப் பார்த்து அவற்றுள் எது அதிகம் என்று பார்த்தால்
…………தீர்ப்பு சரியே!
கோவிலுக்குச் செல்வதும் செல்லாததும் பெண்களின் தனிப்பட்ட உரிமை.
குவிகம் சிறுகதைப்போட்டி மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்.
எஸ்.கண்ணன், பெங்களூர்.
LikeLike