ஹைக்கூ கவிதைகள்……
மழைக்காலம்
நனைந்து கனக்கிறது
குடிசை இழந்த மனம்.
கோப்பை நிறைய தேனீர்
ஆறவில்லை
உன்னை காணாத மனம்.
பழச்சாறு கடை
பிழிந்து எடுத்தார்
வேலைக்கார சிறுவனை.
பாரதியும் பாரதிதாசனும்
அடைக்கப்பட்டே அறைகளில்
நூலகங்கள்.
வேலைக்கார அம்மாவிடம்
இல்லை நாணயம்
செலவு செய்ய.
விளையாட
ஆள் தேடும்
என் வீட்டு பொம்மைகள்.
super
LikeLike