நாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்

Related image

Image result for beauty of kallidaikurichiImage result for beauty of kallidaikkurichi

Related image

 

உழுகிற மாடு வயலை – தன்
உழைப்பால் உயர்த்திப் பார்க்கும்
அழகிய எங்கள் கிராமம் – மலை
அருகில் அமைந்த சொர்க்கம்.

கொக்குடன் மைனா, கிளிகள் – சிறு
குருவி பறக்கும் வயல்கள்
திக்குகள் எங்கும் இளமை – நமைத்
தேடி அழைக்கும் எழில்கள்.

ஓட்டது கூரை மேலே – தினம்
துள்ளிக் குரங்கு ஓடும்
வீட்டது பின்னே நன்கு – குளிர்
வீசும் வாய்க்கால் பாயும்.

பம்பரம், கோலி, கிட்டி – கபடி
பந்தும் ஆடும் இளையோர்
கம்பினைச் சுற்றி வீச -உயிர்க்
காதல் புரிவர் வளையோர்.

பண்டிகைக் கால மெல்லாம் – இசைப்
பண்ணும் கூத்தும் சேர்த்து
கண்களுக் கின்பம் கூட்டும் – நற்
கலைஞர் நிறைந்த நல்லூர்.

அலைநிறை பொருநை நதியில் – மீன்
அலையும் காட்சி கண்டால்
அலைகிற எண்ணம் நிற்கும் – உள்
அமைதி மேலும் ஊறும்.

நெல்லிடை ஓங்கும் செல்வம் – அங்கு
நித்தம் வாசம் செய்யும்
கல்லிடைக் குறிச்சி ஊரை – நாம்
கல்யா ணபுரி என்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.