இப்போது குறும்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. தமிழகத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கமலியை பற்றிய குறும்படம் 2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது .தமிழகத்தில் இருக்கும் மகாபலிபுரத்தை சேர்ந்தவர் ஒன்பது வயதான கமலி மூர்த்தி. ஸ்கேட்போர்டை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் திறன் கொண்டவர் இவர் . கமலி கவுன் அணிந்து ஸ்கேட்போர்டை பயன்படுத்தியபோது எடுத்த புகைப்படம் பிரபல ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் பார்வையில் பட்டது.
காலில் செருப்பு கூட இல்லாமல் ஒரு சிறுமி அசாத்தியமாக ஸ்கேட்போர்டை பயன்படுத்தியதை பார்த்து ஆச்சரியப்பட்ட டோனி அந்த புகைப்படத்தை பகிர கமலி உலக அளவில் பிரபலமானார். இதனையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த ஷஷா ரெயின்போ என்கிற இயக்குநர் தமிழகத்திற்கு வந்து கமலியை குறித்து 24 நிமிட குறும்படத்தை இயக்கினார். அந்த குறும்படம் கடந்த மாதம் நடைபெற்ற அட்லாண்டா திரை விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது.
( நன்றி: தின செய்தி மற்றும் இந்தியா டு டே )
சுகந்தி என்ற தாய் தான் மகள் கமலி தன்னைப்போல் வீட்டுச்சிறையில் மாட்டிக்கொள்ளும் பறவையாக இருக்கக்கூடாது என்பதற்காக அவளுக்குக் கற்றுத்தரும் பாடம் ஸ்கேட் போர்ட் ( SCATE BOARD)
தாய் மகளுக்குத் திறந்த வேலி ! திறந்தவெளி !!
அதன் டீசரைப் பாருங்கள் !