பாடல் : மருதகாசி
படம் : உத்தமபுத்திரன்
இசை: ஜி. ராமாநாதன்
பாடியவர்கள்: T M சௌந்தரராஜன் & P சுசீலா
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே
அல்லி விழி தாவக் கண்டேன் என் மேலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் ப்ரேமையினாலே
மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
(முல்லை)
விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
(முல்லை)