கேளுங்கள் கொடுக்கப்படும்….!
பரம பக்தனவன்
பட்டென்று போய்விட்டான்
கடவுள்மேல் குற்றமில்லை
‘ஐயனே தாங்கவில்லை
பேரிடரில் உழல்கின்றேன்
உடனேநீ காப்பாற்றெ’ன
அகமுருகி கேட்டதுவும்
தர்மராஜா எமனிடத்தில்.
பார்வை எங்கே…?
தோளிலே துண்டு போட்ட அரசியல்வாதி
இலவச வேட்டி கொடுப்பார் என்று பார்த்தால்
என்துண்டையும் அல்லவா உருவிச் சென்று விட்டார்..!