அன்பு உணர்வில்தான்
அகிலமும் சுழல்கிறது
இயற்கையும் செயற்கையும்
கைகோர்த்து செல்கிறது!
அன்பு என்னும் சொல்
காட்டிய நல்ல பாதையில்
நம்மவர் வாழ்க்கையே
ஓடிக் கொண்டேயிருக்கிறது!
மதங்களும் சாதிகளும்
அன்பு என்னும் மென்மலரை
மனதில் தாங்கிக் கொண்டுதான்
ஒற்றுமையே மலர்கிறது!
அன்பு என்னும் உணர்வு
ஓரிடத்தில் விதைத்தால்
ஓராயிரம் இடத்தில்
முளைத்துக் கொண்டே
உலகில் வலம் வரும்!
அன்பு என்னும் ஊற்று
வன்முறைக்கு விடைகொடுக்கும்
அனைத்து உயிரிலும்
சுரந்து கொண்டேயிருக்கும்!
அன்பு வேறு சிவம் வேறு
ஆர்ப்பரிப்பர் அறிவிலார்
அன்பே சிவம் என்பர்
அறிந்த ஆன்மீக அன்பர்கள்!
அன்பே சிவம் .. அன்பே சிவம் .