உன் உயர்நிலை கண்டு
உதடுகளால் வாழ்த்தி
உள்ளத்தால் பொறாமை
தீயை மனதில் வளர்க்கும்
உன் தூரத்து உறவானாலும்
என்றும் துரத்தும் உறவுகளே!
உன் துன்பநிலை கண்டு
உள்ளம் உருகி ஆறுதல்கூறி
கண்ணுக்கு தெரியாத
கடவுளிடம் முறையிடும்
கள்ளமில்லா உள்ளங்கள்
தூரத்து உறவானாலும்
நெருங்கிய உறவுகளே!
உறவுக்கு கை கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
இன்னா செய்தாருக்கும்
இனியவைகள் செய்
அன்புடன் வேண்டி நிற்கும்
உன் இனிய நட்பு உறவுகள்
தூரத்து உறவானாலும்
நெருங்கிய உறவுகளே!