நல்ல இனிமையான சங்கீதம் – அழகான தமிழ் வரிகள் – காதில் தேன் வந்து பாயும். கேட்டு மகிழுங்கள்!!
ராகம் – காம்போஜி
தாளம் – ஆதி
இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர்
பாடியவர்: பித்துக்குளி முருகதாஸ்
பல்லவி
குழலூதி மனமெல்லாம் – கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ – சகி ஒரு சிறு
குறையேதும் என்க்கேதடீ –
அனுபல்லவி
அழகான மயிலாடவும் – (மிக மிக ) காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும் –
மத்யம காலம்
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே – தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடிமிக – இசைந்தோடிவரும் – நலம்காண ஒரு மனம் நாட
தகுமிது எனஒரு – பதம்பாட – தகிடததிமிதி என – நடம் ஆட
கன்று பசுவினொடு – நின்றுபுடைசூழ – என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)
சரணம்
மகர குண்டலம் ஆடவும் – அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும் ……..
மிகவும் எழிலாகவும் ……. காற்றில்
மிளிரும் துகில் ஆடவும் ….
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே – தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடிமிக – இசைந்தோடிவரும் – நலம்காண ஒரு மனம் நாட
தகுமிது எனஒரு – பதம்பாட – தகிடததிமி என – நடம் ஆட
கன்று பசுவினொடு – நின்றுபுடைசூழ – என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)