என் மகள் மிதிலாவிற்கு காதுக்கு ஜிமிக்கி வாங்குவதற்காக அவளை-
யும் கூட்டிக் கொண்டு நகைக் கடைக்குப் போயிருந்தேன்.
‘ஏன்பா… ரெண்டு மாசத்திற்கு முன்னால்தான் இந்த ஜோடி வளை-
யல்களை வாங்கிக் கொண்டு போனேன். இரண்டு, மூன்று முறைதான்
யூஸ் பண்ணி இருப்பேன். அதற்குள் எப்படி கன்னா பின்னா என்று
வளைஞ்சிருக்கு பார்… ‘ என்று ஒரு அம்மாள் பக்கத்துக் கவுண்டரில்
கோணாமாணா என்று வளைந்திருந்த அந்த ஜோடி வளையல்களைக்
காட்டி விவாதித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கடைச் சிப்பந்தியும்
வெவ்வேறு காரணங்களைக் கூறி அவளைச் சமாதானப் படுத்த
முயன்று கொண்டிருந்தான்.
அவர்களையே ஐந்து நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்த மிதிலா
மெதுவாக அந்த அம்மாவிடம் போய், ‘ஆன்டி.. வளையல் யூஸ்
பண்ணினா வளையத்தானே செய்யும்… அதனால் தானே அதன் பெயர்
வளையல்.. இதுக்குப் போய் அந்த அங்கிளைக் கோவிச்சுக்கறீங்க..’
என்றாளே பார்க்கலாம்.
சில விநாடிகள் என் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த அந்த
அம்மாளும் கடைச் சிப்பந்தியும், விவாதத்தை நிறுத்தி விட்டு சிரிக்கத்
துவங்கி விட்டார்கள்.