இந்தமாத திரைக்கவிதை -பட்டுக்கோட்டையார் பாடல்

Image result for நாடோடிமன்னன்"

எம் ஜி ஆர்  அவர்களது படத்தில்  இசையும் பாடல் வரிகளும் இயல்பாகவே  சிறப்பாக அமைந்துவிடும்.

இந்தப் பாடலில் பட்டுக்கோட்டையாரின் அழகான சித்தாந்தமும் தூக்கலாக இருக்கும். 

 

‘காடு வெளஞ்சேன்ன மச்சான் நமக்குக் கையும் காலும் தானே மிச்சம் ‘

 

ஒரு விவசாயியின் அவலத்தை ஒரே வரியில் சொல்லும் திறமை  பட்டுக்கோட்டையாரைத் தவிர வேறு யாருக்கு வரும்?

எம் ஜி ஆருக்கேன்றே எழுதப்பட்ட முத்திரை வரிகள்: 

 

நானே போடப்போறேன் சட்டம் பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம் 

 

சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
பாடல் தலைப்பு சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி    திரைப்படம் நாடோடி மன்னன் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி பானுமதி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் பானுமதி 
இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு   பாடலாசிரியர்கள் சுரதா  
இயக்குநர் எம்.ஜி.ஆர்   ராகம்
வெளியானஆண்டு 1958  தயாரிப்பு
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி

இசை பல்லவி
ஆண்ஓ… ஓ… ஓ… ஓ…  ஓ… ஓ…
பெண் ஓ… ஓ…  ஓ… ஓ…  ஓ… ( இசை )
பெண் : சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி ( இசை )
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரைய ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி ( இசை )
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டு
தகந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு 
நெல்லு வெளைஞ்சிருக்கு வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
கையுங் காலுந்தானே மிச்சம்
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
கையுங் காலுந்தானே மிச்சம்
ஆண் இப்போ காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே
காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே
இசைசரணம் – 1
ஆண் மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி ( இசை )
மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும் ( இசை )
வழி காட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம்  
அவர் பட்ட துயரினிமாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம்
பெண் அட காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம் 
கையுங் காலுந்தானே மிச்சம்
ஆண் காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே 
இசைசரணம் – 2
பெண் மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்
ஆண் அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி ( இசை )  
பெண் பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான் ( இசை )  
ஆண் தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி ( இசை )  
பெண் வாடிக்கையாய்  வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ ( இசை ) 
ஆண் இருள் முடிக் கிடந்த மனமும் வெளுத்தது 
சேரிக்கும் இன்பம் திரும்புமடி 
இனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி 
பெண் அட காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம் 
கையுங் காலுந்தானே மிச்சம்
ஆண் நானே போடப்போறேன் சட்டம் பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம் 
இருவர் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
( கீழ்வரும் பாடல் வரிகள் திரைப்படத்திலும்  
ஒலிநாடாவிலும் இடம் பெறவில்லை.  
பாட்டுப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது )
பெண் வாழை கெளைக்குது சோலை தழைக்குது 
ஏழைகளுக்கதில் என்ன கிடைக்குது
கூழைக் குடிக்குது நாளைக் கழிக்குது
ஓலைக் குடிசையில் ஒண்டிக் கெடக்குது
நல்லவர் ஒன்றாய் இணைந்து விட்டால் மீதம் 
உள்ளவரின் நிலை என்ன மச்சான்
ஆண் நாளை வருவதை எண்ணி எண்ணி அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.