பொங்க லென்னும் புதுமலரே
பொங்கி யின்பம் தாராயோ
பங்கமில் விளைவே தந்த
பெருமை பொங்க வாராயோ!
மனிதரும் மகிழ்ந்து வாழ
ஒத்துநல் லில்லங் களிக்க
மன்பதை செழித்து வளர
வாழ்த்து உரைக்க வாராயோ!
எண்ணிய எண்ணியாங் கெய்துவீர்
தண்ணிய நோக்கும் கொள்வீர்
வாழ்விலே ஏற்றம் காண்பீர்
இசையோடு பல்லாண்டு வாழ்வீர்!