உறங்குவது உண்மையா இலைநடிப்பா
சொல்லிவிடு எனக்கே பெருமாளே..!
மதிகெட்டு நெறிகெட்டு வாழ்கின்ற மாந்தரைக் கண்ட
வெட்கத்தின் விளைவா விரக்தியின் பலனா..?
மக்களே உங்கள் பகுத்தறிவு எங்கே
மாக்களாய் இருக்கின்றீர் தரணியில் இங்கே
ஒருமித்து மகிழ்ச்சியாய் வாழ்வதை விட்டுவிட்டு
சண்டையில் வாழ்கின்றீர் அல்லல் பட்டுப்பட்டு!
ஜாதிச்சண்டை மதச்சண்டை
இனச்சண்டை பணச்சண்டை
பிள்ளைச்சண்டை பாகச்சண்டை
எல்லைச்சண்டை ஈகோச்சண்டை
இதுக்குச்சண்டை அதுக்குச்சண்டை
சண்டையோசண்டை சண்டையோசண்டை!
அகமெனும் பேயை அகற்றிவிடு கண்ணா
துராசைத் தீயினை பொசுக்கிவிடு கிருஷ்ணா
அன்பெனும் அமுதத்தை ஊட்டிவிடு மன்னா
அமைதியின் உயர்வையே காட்டிவிடு கண்ணா..!
——————————–