
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
- வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
- பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
- ஊறுகாய் உற்சாகம் – மே 2019
- பூரி ப்ரேயர் – ஜூன் 2019
- இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
- வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
- வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
- சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
- அவியல் அகவல் நவம்பர் 2019
- சாம்பார் சக்தி டிசம்பர் 2019
- உப்புமா உண்மைகள் ஜனவரி 2020
- சீடை, தட்டை, முறுக்கு பிப்ரவரி 2020
- துவையல் பெருமை !
துவையல் எனில் எனக்கென்றும் கொண்டாட்டம்தான் –
தஞ்சாவூர்க்காரன் நல்ல சுவையறிந்தவனாம் !
கரணம் தப்பினாலே மரணம்தானே !
நல்ல துவையல் செய்வதுவும் வித்தை தானே !
ஏனோ தானோ என்றெல்லாம் செய்தால் வராது –
போடுவதை போட்டால்தான் துவையல் சுவைக்கும் !
அளவு விகிதம் அத்தனையும் அத்துப்படி ஆனா –
துவையல் சுவை நாவினிலே நற்றமிழாகும் !
உப்பு மிளகாய் புளியை வைத்து எவரும் அரைக்கலாம் –
அத்தனையும் ஒற்றுமையாய் சேர்ந்து வரணுமே !
துவையல் கலையை கற்றுவிட்டால் சமையல் ராணிதான் –
மற்றதெலாம் தானே வரும் எளிதில் கூடுமே !
தேங்காய்த் துவையல் துவையல்களின் தலைவனாகுமே !
அதிலுள்ள தங்க ருசி தரணியில் இல்லை !
பருப்புத் துவையல் பந்து பந்தாய் உண்போம் நாமே !
மிளகு ரசம் கூட வேண்டும் முடிவில்லாமலே !
வெங்காயத் துவையல் வாசம் – வாயிலே ஊறும் !
விழுங்கத் தோணும் சுடச் சுட சாதம் சேரும் !
கத்திரியை நன்கு சுட்டால் நாசியைத் தாக்கும் !
துவையலரைத்து வெட்டும் போது இன்னும் கேட்கும் !
செரிமானம் சரியாக இஞ்சித் துவையல் !
வாயில் ருசி மீண்டும் வர புதினாத் துவையல் !
சாத்வீகம் கூடும்போது கொத்தமல்லியாம் –
எந்தக் காயின் தோலினையும் துவையலாக்கலாம் !
எந்த ஊரு போனாலும் இதுபோல் இல்லை !
அன்னை செய்த துவையலைப் போல் எதுவும் இல்லை !
எதனைப் போட்டு அரைத்தாலும் இதன் சுவை வருமா ?
அன்னை காட்டும் அன்பைப் போல் எதுவும் வருமா ?