ஜாதகப் பொருத்தம்..!
‘பத்துப் பொருத்தம் பெர்·பெக்டா பொருந்தியிருக்குன்னு ஒரு ஜோசியர் இல்லே ரெண்டு ஜோசியர்கள் சொன்னாங்க..
ஜாம் ஜாம்னு பெரிய அளவிலே பெண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். இன்னும் ஆறு மாதம் கூட ஆகலே..
மாமியார் கொடுமை தாங்கலைன்னு அடிக்கடி கண்ணைக் கசக்கிட்டு வந்து நிற்கிறா. என்ன செய்யறதுன்னே தெரியலே.’
என்று புலம்பிக் கொண்டிருந்தான் நண்பன் பரந்தாமன்.
அவன் வீட்டில் அவனுடன் பேசிக் கொண்டிருந்த எனக்கு எப்படி ஆறுதல் சொல்றது என்றே தெரியவில்லை.
அவன் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்த என் மகள் மிதிலா திடீரென்று, ‘அங்கிள்.. நாம அங்கேதான் ஒரு சிறிய
தப்பு பண்ணறோம்’ னு சொன்னாள், வியந்தபடியே அவளை நோக்கினோம்.
‘நீங்க பையன் பெண் ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்தீங்க இப்பல்லாம் மெயினா பெண்ணின் ஜாதகம் வரப் போற
மாமியார் ஜாதகத்துடன் பொருந்தியிருக்கான்னு பார்க்கணும்.. அப்புறம்தான் பையன் பெண் ஜாதகப் பொருத்தம் எல்லாம்..’
என்றாளே பார்க்கலாம்.
ஒரு நிமிடம் அவளையே வியந்து நோக்கிய எங்களுக்கு அந்த வேதனையிலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.