சுஜாதா குவிஸ்
- சுஜாதாவை வளர்த்த அவரின் அப்பாவழிப்பாட்டியின் முழுப்பெயர் என்ன? (பல இடங்களில் சுஜாதா இவரைப்பற்றிக்குறிப்பிட்டிருக்கிறார்)
- சுஜாதாவின் அப்பா இவரிடம் கேட்கவேண்டும் என்று எழுதிவைத்துக்கேட்கமுடியாமலேயே இ|றந்துவிட்டசப்ஜெக்ட் என்ன? –
3.அந்தக் கேள்வியெல்லாம் நாங்க கேக்கறதிலை” என்னும் அதிர்ச்சி வரிகளுடன் முடியும் சுஜாதாவின் சிறுகதை எது? –
- லாயர்கணேஷ் தோன்றிய முதல் கதை எது? அடுத்த சில கதைகளில் வரும் அவரின் அஸிஸ்டெண்ட் பெயர் என்ன? –
- “மகாவிஷ்ணுதான் தரிசனம் தர விரும்புகிறாரோ என்று பார்த்தால்” என்னும் சுவாரஸ்ய வரிகளில் தொடங்கி சுஜாதா எழுதினது என்னசப்ஜெக்ட்?
- சுஜாதா பல இடங்களில் மேற்கோள் காட்டிய பெண் கவிஞர் யார்? –
- ”நிம்ஜோஇண்டியன்டிஃபன்ஸ் ஆடுவியா” என்று கேட்கும் கதாபாத்திரம் ஆணா பெண்ணா?
- Dying is an art like everything else I do it exceptionally well –சுஜாதா மேற்கோள் காட்டிய இந்தக்கவிஞர் யார்? – இதை மேற்கோள் காட்ட வேண்டிய உந்துதல் என்னவாக இருக்கும்?
- சுஜாதாவின்லாண்டரிக்கணக்கில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன? –
- ”வட்டநிலாப்பின்னணியில்,வண்ண ஜரிகை நிலத்தில் அந்தத்தோணி அசைந்து அசைந்து வந்தது. எங்கும் இருட்டு. காட்டைப்போல இருட்டு. மசியைப்போல இருட்டு. சாவைப்போல இருட்டு.” – இந்த அபார வரிகள் எந்தக்கதையில் வருகின்றன?
- சுஜாதா எழுத்தாளர் ஆனபிறகு எழுதிய முதல் நாடகத்தின் பெயர் என்ன?
- சுஜாதா – பூர்ணம்விஸ்வனாதன் கூட்டணியில் வந்த முதல் நாடகம் எது?
- திராவிடன் பண்டுதானே?அது பிராவிடண்ட பண்ட் , இங்க்லீஷ் பேப்பரை மாவு சலிக்கிறதுக்கு உபயோகப் படுத்தினா அவ்வளவுதான் வரும். இது எந்த நாடகத்தில் வரும் வசனம்?
- கடவுள் வந்திருந்தார் நாடகத்தில் வரும் எதிர்கால மனிதனின் பெயர் என்ன?அவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவன் ?
- இந்த நாடகத்தைசெட்டுக்கள் ஏதும் இன்றியே ஒளியால் பிரித்து நடிக்க முன்வந்தாலும் எனக்குச் சம்மதமே ! – சுஜாதா எந்த தன் நாடகத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்?
- அலன்பெக்கர் எழுதிய டோலரஸ் என்ற நாடகத்தின் பாதிப்பில் சுஜாதா எழுதிய நாடகம் எது?
- ஜே பிமில்லரின் பிரபல டெலிவிஷன் நாடகத்தை ஒட்டி எழுதிய நாடகம் எது?
- சுஜாதா என்கிற ரங்கராஜன்எங்கு பிறந்தார்?
- முதல் கதை எந்தப் பத்திரிக்கையில் வந்தது?
- சுஜாதாவுடன் திருப்பூர் கிருஷ்ணன் பணியாற்றியது எந்தப் பத்திரிகையில்?
21 . கணையாழியில் சுஜாதா கடைசிப்பக்கத்தை எவ்வளவு காலம் எழுதினார்?
22 . “ அடிக்கடி எழுதுங்கள்” என்று ஒரு வரியில் சுஜாதாவை ஊக்குவித்த பத்திரிகை ஆசிரியர் யார்?
- ஒரு நாணயம் (coin) பற்றி சுஜாதா ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். எந்த நாணயம் அது?
- .”என்னே இந்த சமூகத்தின் கொடுமை?”என்று சுஜாதா ஒரு கதையில் எழுதாமல்இருந்ததற்காக தன்னைப் பாராட்டிக் கொள்ளும் கதை எது?
- . “கணவனின் சட்டை என்பதே ஒருகிறக்கத்தைஏற்படுத்த அன்புடன் அதை முகர்ந்து பார்த்தாள். முதுகுப் பக்கத்தில் லேசான பர்பியூம் வாசனை. நம் வீட்டில் இந்த வாசனை கிடையாதே? ” இது எந்தக் கதையில் வருகிறது?
- சுஜாதா எழுதியதிமலா என்ற சயின்ஸ் பிக்ஷனில் திமலா எதை உருவகப் படுத்தியிருக்கிறது?
- .சுஜாதாவின் எந்தக் கதை குமுதத்திலும் பின்னர் குங்குமத்திலும் பிரசுரிக்கப்பட்டது? அதற்கு இலக்கியச் சிந்தனையின் விருது கூட கிடைத்திருக்கிறது.
- .விகடனில்வந்த ஒரு கதை டி வியில் நாடகமாக வந்துள்ளது?
- இந்த கதையைப் படித்து விட்டு,உங்க வீட்டிற்கு (கொல்ல) வரட்டுமா என ஒருவர் சுஜாதாவிற்கு விகடன் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினாராம். எந்தக் கதை ?
- இலட்சம் புத்தகங்கள் என்கிற சிறுகதை எந்த ஊரில் நடந்த நிகழ்ச்சியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது?
- தலைமைச் செயலகம் என்று எதைப்பற்றி எழுதினார்?
- சுஜாதாவின் கருப்பு வெளுப்பு சிவப்பு கதையின் speciality என்ன?
- எமர்ஜென்ஸிபற்றி சுஜாதா பாடிய நேரிசை வெண்பாவின் முதல் சொல் எது ?
- . சிறுவர் இலக்கிய வரிசையில் சுஜாதா எழுதிய நாவல் எது ?
- எல்லோருக்கும் தெரிந்த ஆனால் தெரியாதது மாதிரி நடிக்கும் சுஜாதாவின் பிரபலமானஜோக்கில்வரும் நாடு எது?
- சுஜாதாவின் கோணல் பார்வை என்று அவரை விமர்சித்து புத்தகம் போட்ட எழுத்தாளர் யார் ?
- ஓலைப்படாசுஎன்ற கதையின் மெயின் தீம் என்ன ?
- சுஜாதாவின் முதல் நாவல் எது?
- . சுஜாதா தயாரித்த தமிழ்ப் படம் எது?
- சுஜாதாவின் எந்தத் தொடர் கதைக்காக அவருக்குகட்-அவுட்வைத்தார்கள்?
- பத்துசெகண்ட்முத்தம் எதைப்பற்றி?
- 14 நாட்கள் எதைப் பற்றி?
- சுஜாதா எழுதியஒரெழுத்துநாவலின் பெயர் என்ன?
- சுஜாதாவுக்குத்தமிழில் பிடித்த 6 வார்த்தைக் கதை?
- சுஜாதா ஒரு நடிகர்-நடிகைதிருமணத்திற்குசென்று எடுத்த போட்டோ கற்றதும் பெற்றதுமில் வந்திருக்கிறது. யார் அவர்கள்?
- காகித சங்கிலிகள் என்ற நாவல் எந்த வியாதியை அடிப்படையாக வைத்து எழுதியது?
- கொலையுதிர்காலத்தில் சுஜாதா பயன்படுத்திய விஞ்ஞானக் கோட்பாடு எது?
- கணையாழியில் சுஜாதா எழுதிய
“பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி-மத்தபடி
பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சணை.”
என்ற வெண்பாவிற்கு ஈற்றடி கொடுத்தவர் யார்?
- கதை கட்டுரை தவிர முவரதராசனார்– சுஜாதா இருவருக்கும் உள்ள ஒருஒற்றுமை என்ன?
50 நைலான் கயிறு கதையில் டெலிபோன் எண்ணின் முடிச்சை அவிழ்ப்பது எது?