பெண் பார்க்கும் படலம்…
பெண் சுகுணாவின் பெற்றோர்கள் ராகவனும், மைதிலியும் ஓடியாடி வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.
மாப்பிள்ளை முரளியின் பெற்றோர்கள் ஸ்ரீதரன், வைதேகியின் முகங்களில் ஒரு குதூகலம், பூரிப்பு…
நமது வழக்கப்படி, தங்களது விருப்புகள், வெறுப்புகள், எதிர்காலக் கனவுகள், திட்டங்கள் – இவற்றையெல்லாம்
தனியாகப் போய் அரை மணி நேரம் விவாதித்து விட்டு வந்திருந்தார்கள் முரளியும், சுகுணாவும்.
சுகுணாவின் முகத்தில் படர்ந்திருந்த வெட்கம் கலந்த பூரிப்பைப் பார்த்த ராகவன் மைதிலிக்கு மனதில் ஒரு பரவசம்-
ஒரு நிம்மதி. முரளியின் முகத்திலே ஒரு திருப்தியின் நிழலைக் கண்ட ஸ்ரீதரன் வைதேகி முகங்களிலும் ஒரு நிம்மதி.
சொஜ்ஜி, பஜ்ஜி, பரிமாறப்பட்டது. டிபன் சாப்பிட்டுக் கொண்டே உலகச் சமாசாரங்களையெல்லாம் குதூகலமாக
அலசிக் கொண்டிருந்தார்கள் இரு வீட்டாரும்.
‘மாப்பிள்ளை.. நம்ம சமுதாயத்தின் முக்கியமான காவியங்கள் – ராமாயணமும், மகாபாரதமும். கடவுள் அவதாரங்-
களான ராமரும், கிருஷ்ணரும் உண்மையாகவே முக்கியமான நாயகர்கள். நீங்கள் லை·ப்லே ராமரா இருக்க விரும்பறீங்-
களா, இல்லே கிருஷ்ணரா இருக்க விரும்பறீங்களா..?’ என்று கேட்டார் ராகவன் திடீரென்று.
ஒரு விநாடி கூட தயக்கமின்றி, ‘இதிலென்ன சந்தேகம்..? கிருஷ்ணரா இருக்கத்தான் விரும்புவேன்..’ என்றான் முரளி.
‘அப்படியா..” என்ற ராகவன் முகத்தில் சிறிது வாட்டம். ஒரு நிமிடத்தில் சுதாரித்துக் கொண்டு, மற்றவர்கள் பேச்சில்
கலந்து கொண்டார்.
‘ஓ… ரொம்ப டைம் ஆச்சு…. அப்ப நாங்க கிளம்பறோம். போய் கலந்து பேசி ·போன் பண்ணறோம்’ என்று எழுந்-
தார் ஸ்ரீதரன்.
மாப்பிளை வீட்டார் விடை பெற்றுக் கொண்டு போய் அரை மணி நேரம் ஆகியிருக்கும்.
‘எனக்கு என்னவோ இந்த இடம் சரிப்படும் என்று தோணவில்லை… ‘ என்றார் ராகவன் சிறிது வருத்தத்துடன்.
‘என்ன சொல்றீங்க..?’ என்று கேட்டாள் மைதிலி சிறிது அதிர்ச்சியுடன்.
இந்த இடம் நிச்சயமாகக் குதிரும் என்று கனவு கண்டு கொண்டிருந்த சுகுணாவும் அதிர்ச்சியோடு நோக்கினாள்.
‘இல்லே.. ஏகபத்தினி விரதனான ராமனை விட்டு விட்டு எப்போது கோபியர்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் கிருஷ்-
ணரின் வாழ்க்கைதான் எனக்குப் பிடிக்கும் என்று சொன்னாரோ.. அங்கேயே எனது மதிப்பிலிருந்து ஹன்ட்ரட் பர்-
ஸன்ட் விழுந்துட்டார்… நாம் இவளைக் கட்டிக் கொடுத்துட்டு அவர் கோபிகா கிருஷ்ணன் போல் இருந்துட்டார்னா..?
கொஞ்சம் சலனத்துக்கு ஆளாயிட்டார்னா நம்ம மகளின் கதி…?’ என்றார்.
மைதிலியின் மனதிலும் சிறிது குழப்பம் ஏறியது.
கனவுகளில் மிதந்து கொண்டிருந்த சுகுணாவின் மனதில் ‘ஒரு வேளை.. அப்பா சொல்வது போல் இருந்து விட்டால்..’
என்ற சந்தேகம் எழுந்தது. கனவுகளுடன் இருந்த அவள் முகம் வாடிச் சூம்பியது.
‘இப்போ என்ன செய்யப் போறீங்க..? என்ன சோல்லப் போறீங்க…?’ என்றாள் மைதிலி.
‘அவர்கள் போய் டிஸ்கஸ் பண்ணிட்டு ·போன் பண்ணறேன்னு சொன்னாங்க இல்லையா… அவர்கள் கால் வந்ததும்
ஏதாவது பதில் சொல்லி சமாளிப்போம்’ என்றார் ராகவன் தீர்மானமாக.
‘டேய்.. பெண்ணின் அப்பா ராகவன் கேட்ட கேள்விக்கு, நீ ஏகபத்தினி விரதனான ராமன் போல் வாழணும்னு சொல்-
லியிருக்கணும். உன் பதிலைக் கேட்டு அவர் முகம் சிறிது வாடி விட்டது. ஆனால் அதை அவர் சாமர்த்தியமாக
மறைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார் தெரியுமா..?’ என்றார் ஸ்ரீதரன் முரளியை நோக்கி.
‘அப்பா உங்கள் பார்வையில் அப்படித் தோன்றலாம்.. பட் என் பார்வையில் இட் ஈஸ் டோடலி டி·பரண்ட்.. நீங்க
நம்ம காவியங்களைப் படிச்சீங்கன்னா, ராமர் இல்லற வாழ்க்கையிலே சந்தோஷமா வாழ்ந்த நாட்கள் ரொம்பக் கம்மி…
ஆனா கிருஷ்ணன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தார். என்னுடைய குடும்ப
வாழ்க்கையும் அப்படி சந்தோஷமா இருக்கணும்.. அதனாலே தான் அப்படிச் சொன்னேன். நீங்க அவங்களுக்கு ‘எஸ்’
ஸ¤ன்னு சொல்லிடுங்க…’ என்றான்.
‘இல்லடா… முறைப்படி பெண் வீட்டார்தான் ·போன் பண்ணி விவரம் கேட்கணும். அவங்க கால் வந்தா க்ரீன்
ஸிக்னல் குடுத்துடறேன்’ என்றார் குதூகலமாக.
ராகவனின் ·போன் காலுக்காக காத்திருந்தார்கள்.