பொடியின் பெருமை

ஒன்றுமில்லாவிட்டாலும் இங்கே பொடி இருக்குது!
ஒவ்வொன்றும் தனிச்சுவையாய்த்தான் இருக்குது!
சுடு சாதம் பிசைந்துவிட்டால் சுவை கூடுமே!
பொடி இருந்தால் போதும்_என்றன் பசி தீருமே!
கபகபன்னு பசியெடுத்தால் தேங்காய்ப் பொடி சாதம்!
அப்பளம் வடகம் கூட இருந்தால் சூப்பர் தானே!
பசியில்லை மந்தமென்றால் கறிவேப்பிலைப்பொடி சாதம்!
நல்லெண்ணெய் நிறைய விட்டு பிசைந்தடிக்கலாம்!
எள்ளுப்பொடி சாதமென்றால் கிளுகிளுப்பேறும்!
புதினாப்பொடி சாதமென்றால் புது ரத்த மூறும்!
பருப்புப் பொடி இருந்துவிட்டால் எதுவும் வேண்டாம்!
பசுநெய்விட்டு பிசைந்துவிட்டால் புகுந்து ஆடலாம்!
அங்காயப்பொடி என்ற ஒரு பொடி இருக்குது!
வயிறு கொஞ்சம் சரியில்லேன்னா அது மருந்தாகுது!
நாக்கு செத்துப்போச்சு தென்றால் நமக்கு பொடிபோலில்லை!
நாலுவிதப் பொடியிருந்தால் போதும் போதும்!
எத்தனையோ பொடி இருக்குது நம் வீட்டிலே!
எத்தனையோ ருசி இருக்குது நம்ம நாட்டிலே!
அம்மா செஞ்ச பொடி என்றால் அதில் அதிசயம் பாரு!
அன்பு அதில் கலந்திருக்கு_ அது அத்தனை ஜோரு!