மொய்த்திடும் கிருமியால்
மெய்யும் பொய்யாச்சு!
ஆறறிவு வீணாச்சு!
பேரருள் தேடி
அலையும் பேதை மனம்!
சிறைதனில் வாடல்
நமக்குத்தான்!
இயற்கை கொஞ்சமும்
தந்நிலை மாறவில்லை !
நமது கண்டுபிடிப்பால்
விளைந்தது நாசம்!
ஜனன மகிழ்வில்லை
மரண ஓலமில்லை
சிறைதனில் அடைபட்ட
உயிரினம் நாம்!
நமக்கு நாமே
சிறை கண்டோம்!
நெஞ்சமும் சிறையாச்சு
கொஞ்சமும் பாதிப்பு
குறையவில்லை ஏன்?
புலப்படாத புதிர்!
சிறையில் இருக்கும்
மிருகங்கள் கைதட்டி
சிரிக்கும் நேரமிது!
நமைப் பார்த்து
இது உனக்கு தேவையா
எனக்கேட்கும் நேரமிது!
புரிந்துநடந்தால்
உலகம் தப்பும்!
இதே தப்பை
திரும்பச் செய்தால்
உய்வில்லை உனக்கு!
மானங்கெட்ட மனிதா!
மதிக்கக் கற்றுக்கொள் !
இல்லையேல் மிதிபடுவாய்
கண்ணுக்கு தெரியாத இனத்தால்
!
வாழு வாழவிடு!
உன்கையில் உலகம்
தன்னையே கொடுத்தது!
நம்பிக்கைத் துரோகம்
செய்த இனமே
உன்னைப் புனிதனாக்கு!
உன் பாவத்தால்
பாவம் ஒன்றும்
அறியாத அப்பாவிகள்
பாவிகள் ஆகிவிட்டனர்
ஏனிந்த கொலைவெறி?
புரிந்து மாறிவிடு
இல்லையேல் மாண்டிடுவாய்
கொத்து கொத்தாக!
இயற்கை தன்னை
சுத்தம்செய்யும் நேரமிது,
வேடிக்கை பார்!
தன்னைக் காத்திட
இயற்கைக்குத் தெரியும்
உணர்ந்து திருந்திடு !
இல்லையேல்
மறந்திடு உன் உயிரை.