மனிதன் நினைப்பதொன்று , இறைவன் நினைப்பதொன்று

வாட்ஸ் அப்பில் சில நல்  முத்துக்களும் இருக்கும் . அதற்கு இது ஓர் உதாரணம். 

 

Sri Math Bhagavad Gita

 

மனிதன் திட்டமிட்டதற்கு

இறைவன் அளித்திருக்கும்
இடைக்கால தீர்ப்பு.
இதோ
*மனிதன்*
ஏப்ரல் ஒன்று முதல் NPR கணக்கெடுப்பு என்று அறிவித்தது.
*கடவுள்*
இப்போதைக்கு NPR கிடையாது என்று அறிவித்தது.
*மனிதன்*
எப்பொழுதும் இல்லாமல் இப்போது ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என அறிவித்தது.
*கடவுள்*
ஒன்று முதல் ஒன்பது வரை ஆல்பாஸ் இப்போது.
*மனிதன்*
ஊதிய உயர்வு கேட்டு போராடிய மருத்துவர் செவிலியர்க்கு தீர்ப்பு – சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று சொன்னது.
*கடவுள்*
மருத்துவர், செவிலியர் நம்மை காக்கும் மனித தெய்வங்கள் என்று சொன்னது. மேலும் அவர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு ஊதியம் அறிவித்தது.
*மனிதன்*
இவர் அவரை தொட்டால் தீட்டு என்பது அன்று.
*கடவுள்*
இப்போது எவரை தொட்டாலும் உயிருக்கே வேட்டு என்பது இன்று.
*மனிதன்*
ஒழுக்கமே இல்லாமல் கடைகளில் முண்டி அடித்து பொருட்களை வாங்கியது அன்று.
*இறைவன்*
ஒரு மீட்டர் இடைவெளி  விட்டு வட்டத்துக்குள் நிற்க வைத்தது இன்று.
*மனிதன்*
பொது இடங்களில் எச்சிலைத் துப்பிக்கொண்டிருந்தது அன்று.
*கடவுள்*
பொது இடங்களில் வாயையே திறக்காமல் மாஸ்க் போட வைத்தது இன்று.
*கடவுள்*
செல்வாக்கைக் காட்ட ஊரைக்கூட்டி கோடிக்கணக்கில் செலவு செய்து கல்யாணம் செய்தது அன்று.
*கடவுள்*
20 பேருக்கு மேல் இல்லாமல் எளிமையான வைபவத்தை சொல்லி கொடுத்தது இன்று.
*மனிதன்*
செத்தால் ஆயிரம் பேர் வர வேண்டும் என்று நினைத்தது அன்று.
*கடவுள்*
செத்தால் தூக்கி செல்ல நான்கு பேர் போதும் என்று சொல்லி கொடுத்தது இன்று.
*மனிதன்*
இறைவனை வழிபட கோவிலுக்கு செல்லாதவன் பாவி என்றான் அன்று
*கடவுள்*
இப்போது கோவிலுக்கு செல்பவனுக்கு அடி உதை என்றான் இன்று.
*மனிதன்*
தூய்மை செய்பவர்களை
‘துப்புறவு பணியாளர்கள்’ என்றனர் அன்று.
*கடவுள்*
தூய்மை செய்பவர்கள்
இனி ‘ தூய்மை பணியாளர்கள் ‘என்று அழைக்கப்படுவது இன்று.
*மனிதன்*
வீட்டிற்கே வராமல் இரவும் பகலும் உழைப்பவனை உழைப்பாளி என்றான் அன்று.
*கடவுள்*
21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது மட்டுமே உயிர் வாழ ஒரே வழி என்றான் இன்று.
*மனிதன்*
பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது தவறல்ல என்றான் அன்று.
*கடவுள்*
பொதுத்துறை ஊழியர்களின் அயராத உழைப்பை தேசம் காண்கிறது என்றான் இன்று
*மனிதன்*
டாஸ்மார்கை பூட்டவே இயலாது என்றான் அன்று
*கடவுள்*
ஏப்ரல் 14 வரை டாஸ்மாக் பூட்டப்படும் என்றான் இன்று
இன்னும் எத்தனை எத்தனையோ பாடங்களை நமக்கு சொல்லி கொடுக்கும் ‘ கொரானா’ ஒரு வகையில் நமக்கு ‘ கடவுள்’ மாதிரி தான்.
இறைவனின்
இடைக்கால தீர்ப்பை
நாம் மதிக்காவிடில்
இறைவனின்
இறுதி தீர்ப்பு
எப்படி இருக்கும்
என்பதை
அவரவர்களே
யூகித்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.