அம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் !

அம்மா கை உணவு (27)

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
5. ரசமாயம் – ஜூலை 2018
6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019
17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
20. சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
21. அவியல் அகவல் நவம்பர் 2019
22. சாம்பார் சக்தி டிசம்பர் 2019
23. உப்புமா உண்மைகள் ஜனவரி 2020
24. சீடை, தட்டை, முறுக்கு பிப்ரவரி 2020
25. துவையல் பெருமை மார்ச் 2020
26. பொடியின் பெருமை ஏப்ரல் 2020

27. கீரை மகத்துவம் !

முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்.

எளிமையின் இலக்கணமே !
ஏழைக்கேற்ற காய்கறியே !
எவருக்கும் எட்டிவிடும் உணவுகளில் உத்தமனே !
ஊருக்கு உபயோகம் உனைப்போலே யாரும் இல்லை !

காய்கறிகள் அனைத்துமே உடலுக்கு ஏற்றவைதான் –
அளவு கூடிடிலோ அமிர்தமும் நஞ்சாகும் !
எத்துனைதான் உண்டாலும் ஏதுகுறை எனும் விதமாய்
இருப்பது ஒன்றேதான் – அதுவே எம் கீரை என்போம் !

ஒன்றா இரண்டா கீரையிலே வகை தொகைகள் !
வரிசையாய் வந்துவிடும் கீரை பெயர் சொல்லிடிலோ !
இன்றுரைப்பேன் உலகத்தீர் எம் கீரை பெருமையினை –
ஏற்றிடுவீர் என்றே நான் இப்போதே பகர்கின்றேன் !

முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, முடக்கத்தான் –
பாலக் பசலை பொன்னாங்கண்ணி அவள் !
மணத்தக்காளி மற்றும் முருங்கையும் ஒரு கீரை !
எதைச் சொல்வேன் இப்படி எத்தனையோ பல கீரை !

கடைந்திடலாம் அள்ளி அள்ளி ருசித்திடலாம் !
துவையல் செய்திடலாம், குழம்பு வைத்தும் சாப்பிடலாம் !
மோர்க்கீரை செய்து விட்டால் பாத்தி கட்டி அடித்திடலாம் !
யார் கீரை வெறுத்திடுவார் ? அதன் சுவையை மறுத்திடுவார் ?

உயர்ந்த குணம் , உயர்ந்த மனம், உயிர் சக்தி உயர்த்திடுமே !
சத்தைக் கொடுக்கும், நமக்கு சத்தியமாய் கை கொடுக்கும் !
பார்த்தால் புரியாது, பகட்டு எதுவும் கிடையாது !
என் அன்னை அன்பினைப் போல் விலை மதிக்க முடியாது !

***********************************************
ஜி.பி. சதுர்புஜன்
E Mail: kvprgirija@gmail.com Ph: 98400 96329

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.