ஆடோட்டிப் போகின்றாள்
அத்துவானக் காட்டிலே
அழகான பெண்ணொருத்தி
கையில் உள்ள செங்கோலே
அவளுடைய வாழ்வோடு
ஆடுகளையும் வழி நடத்தும்.
கலைந்த தலைமுடி
காற்றில் கரகரப்ரியா பாட
காலின் கொலுசெல்லாம்
ஜதி தாளம் போட
வண்ணப் புடவையது
வாய்திறந்து சிரிக்கிறது.
அந்தி சாயும் வரை
அங்கே அவளது ராஜ்ஜியம்தான்
அரசியின் பேச்சை
ஆடுகள் கேட்டு நடக்கும்
அருமையான ஜனநாயகம் அது.