மலரின் அழகை
வட்டமிட்டு
வண்டு !
ஆதவனின் அழகை
சுட்டெரித்துக் காட்டும்
ஒளிக்கதிர்கள் !
மழையின் அழகை
வெளிப்படுத்துவது
சாரல் துளிகள் !
உண்மையின் அழகை
உணர்த்திக் காட்டுவது
உன்னத உயர்வு !
உழைப்பின் அழகை
வெளிக்காட்டுவது
வியர்வைத் துளிகள்!
எண்ணங்களின் அழகை
எடுத்துக் காட்டுவது
மனிதனின் செயல்கள்!
அன்பின் அழகை
இயல்பாக காட்டுவது
குழந்தையின் மழலை !
இசையின் அழகை
இசைத்துக் காட்டுவது
ஏழு சுரங்கள் !
ஆண்டவனின் அழகை
அள்ளி வழங்குவது
அன்னை தந்தை உறவு!