குவிகம் இணையவழி அளவளாவலில் என் ‘சிறு’கதை நிகழ்வு – ஒரு விளக்கம்
குவிகம் இணையவழி அளவளாவல் ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலை 6.30 மணிக்கு நடைபெற்று வருகிறது. சிறுகதைகள் வாசிக்கும் நிகழ்வினை 26.07.2020 அன்று நடத்த உள்ளோம். சில விஷயங்கள் தெளிவுபடுத்துவது அவசியம் என எண்ணுகிறோம்
1. கதைகள் 300 சொற்களுக்குள் இருக்கவேண்டும்.
நீண்ட கதைகள் படிக்கப்பட்டால் அவை பார்வையாளர்களைச் சென்றடைவதில்லை என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் இந்த விதிமுறை அவசியமாகிறது.
நிகழ்வு ஒரு மணிநேரம்தான் அதில் கதைகள் படிக்க 40 நிமிடங்கள்தான் கிடைக்கும். அதில் பலருக்கு வாய்ப்பளிக்க எண்ணம்.
2. கதைகள் முன்னதாக WORDஅல்லது PDF வடிவில் அனுப்பிவைக்க வேண்டும்.
குறிப்பிட்ட அளவிற்குள் கதைகள் உள்ளனவா, கதைகளில் அரசியல், சமயம், கொரானா தவிர்க்கப்பட்டுள்ளனவா ஆகியவற்றை உறுதிசெய்து கொள்ள இது அவசியமாகிறது. மேலும் நிகழ்வினை ஒருங்கிணைக்கவும் வசதியாக இருக்கும்.
3. நிகழ்வில் கதையினை கதாசிரியர்கள் நிகழ்வில் நேரடியாகப் படிக்கவேண்டும்.
சிலர் தங்கள் குரலில் பதிவு செய்து அனுப்பி உள்ளார்கள். கதைகளை ஒலிபரப்பும் எண்ணம் இல்லை. நிகழ்வில் இணையம் மூலம் பங்குகொண்டு கதாசிரியர் கதைகளைப் படிக்கவேண்டும். கதைகளை ஒலிவடிவில் அனுப்பியவர்கள் மீண்டும் PDF / word கோப்பாக அனுப்பிவைக்கவும்.
4. தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தலாம்.
இதுவரை கிடைக்கப்பெற்ற விதிமுறைகளுக்கு உட்பட்ட கதைகளுக்கே இரண்டு நிகழ்வுகள் தேவைப்படும். மற்றும் 18.07.2020 தேதிக்குள் வரவிருக்கும் கதைகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் மேலும் நிகழ்வுகள் தேவைப்படலாம்
முதல் நிகழ்வு 26 ஜூலை என்பது முடிவாகிவிட்டது. அந்த நிகழ்வில் கதையினை வாசிக்கவேண்டிய நண்பர்களுக்கு தனியாக செய்தி நாளை அனுப்பப்படும். தொடர்நிகழ்வுகள் தேதிகளும் உங்கள் கதை என்று வாசிக்கப்படவேண்டும் என்பதும் முன்கூட்டியே தெரியப்படுத்துவோம்
5. சந்தேகங்களும் தொடர்பும்
8939604745 எண் whatsApp மட்டுமே.சந்தேகங்களை அலைபேசி மூலம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 9442525191 (சுந்தரராஜன்) எண்ணைத் தொடர்புகொள்ளலாம்./ ilakkiyavaasal@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் அலைபேசி எண்ணை மின்னஞ்சலில் மறக்காமல் குறிப்பிடுங்கள்.