பாலில் மோரும் வெண்ணையுமே
பதுங்கி இருக்கும் தெரியாது
மாலின் உருதான் என்றாலும்
மனதிற் கறியும் அறிவேது !சின்னக் குழந்தை என்றாலும்
செய்யும் லீலை பலகோடி
என்னைத் திருடும் அவன்கருணை
இருளென் உள்ளம் உணராது !புல்லாங் குழலின் இசையாலே
புரட்டி எடுக்கும் கலைவாணன்
பல்லாங் குழியாம் காலத்தில்
பதமாய் ஆடும் இளங்கண்ணன் !
பதுங்கி இருக்கும் தெரியாது
மாலின் உருதான் என்றாலும்
மனதிற் கறியும் அறிவேது !சின்னக் குழந்தை என்றாலும்
செய்யும் லீலை பலகோடி
என்னைத் திருடும் அவன்கருணை
இருளென் உள்ளம் உணராது !புல்லாங் குழலின் இசையாலே
புரட்டி எடுக்கும் கலைவாணன்
பல்லாங் குழியாம் காலத்தில்
பதமாய் ஆடும் இளங்கண்ணன் !
அவனுக் கென்று தருவதற்கு
அகிலம் முழுக்கப் பொருளேது
இவனுக் குள்ளே அழுக்கிருக்கு
அதனைக் கொள்வான் வெளுப்பதற்கு !
பசுவும் பச்சைப் புல்வெளியும்
பாம்பும் நச்சும் அவனாவான்
விசுவம் முழுக்க நிறைவாக
விளங்கும் கண்ண அமுதாவான் !
கண்ணன் கோவில் எனக்காகக்
கால மெல்லாம் திறந்திருக்கும்
எண்ணப் பறவை வடிவாக
எளிதாய்ச் செல்ல வழியிருக்கும்!