மாஞ்சோலை குயிலு ஒன்னு
மஞ்சளாடை கட்டி இருக்கு…
மாம்பூக் கொட்டும் போது
மனசும் கொஞ்சம் கொட்டிருச்சு…
தூண்டாமணி விளக்கு தூங்கிட்டு இருக்கு
தூண்டிவிட வர மாட்டாயோ நீ..
தரிசனம் தர மாட்டாயா நீ
கரிசனம் காட்ட மாட்டேனா நான்…
நான் பாடாத ஒரு பாட்டு
நீ வாராயோ அதை கேட்டு…
வருச நாட்டு ஓரத்துல
வருஷம் எல்லாம் காத்திருக்கேன்…
வாழப்பாடி சந்தை போயி
வாழமரம் வாங்கி வாரதெப்போ…
முல்லைபூ வாங்கி வந்து
முல்லைக்கு சூட்டுவதெப்போ …
காட்டன் துணி போட்டு
காட்டுக்குள்ள போன புள்ள…
காதல் வந்துடுச்சு என்று
காதுக்குள்ள சொல்லி புட்டேன் …
வாசலிலே கோலம் போட்டு
வாசமல்லி பூச் சூடு…
புளியம்பூ சேலை கட்டு
புண்ணைமர பந்தல் போடு…
சிக்கல் எல்லாம் தீர்ந்துவிடும்
சிக்கலில் நாம் சேர்ந்துவிடுவோம்… !
(சிக்கல் – ஊரின் பெயர்
ஆலயம் – சிங்கார வடிவேலர் கோவில் )