மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் ஜெர்மன் மூலம் தமிழில் கிருஷ்ணமூர்த்தி

Fact Check: Is this a photo of Mahatma Gandhi's assassination?

There Was No Time For Emotions': PTI Journalist Recalls How Gandhi's Assassination Was Reported

When newspapers across the world mourned the loss of Mahatma Gandhi | Gandhi's Last Days

வாசிப்போம் வாசிப்போம்: முப்பத்திரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (03.10.2019)

தோட்டா            நான்காவது வினாடி முடிவடைந்து விட்டது, காந்தி. இன்னும் ஒரு வினாடி காலம் தான் நீ உயிர் வாழமுடியும்.. நான்.உள் இதய அறையில் தங்கி உறங்குவதற்குச் சிறந்த இடம் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உணர்ச்சி வசப்படாமல் இரு காந்தி! ஆறுதல் அடைந்து விடு. மகாத்மா! இன்னும் ஒரு விநாடியில் நாம் இருவருமே அமைதியில் ஆழ்ந்து விடுவோம்!  

குரல்       :        கரம்சந்த் காந்தி, இன்னும் ஒரு வினாடிகாலம் இருக்கிறது, உனக்கு. பயணத்தைத் தொடர்! நாம் பறந்து செல்லவேண்டிய பாதை வெகுதூரத்தில் உள்ளது. காற்று மண்டலம், அழுத்தம் குறைவானது! உன்னைத் தயார் செய்து கொள்! 

காந்தி :      நாம் மிக உயரத்தில் பறந்து மேலும் மேலும் மேலே சென்று கொண்டிருக்கிறோம். பூமி என்று ஒன்று இருப்பது கண்களுக்கு புலப்படவில்லையே! 

குரல்       :        (சிரித்து) பூமி என்றால் என்ன? மேல் நோக்கிப் பார்?   

காந்தி      :        முடியவில்லையே, பேரொளி கண்களை கூசுகிறது. கண்களை மூடிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.  

குரல்       :      (சிரித்துவிட்டு அந்தப் பேரொளியின் முன்னால் இன்னும் மூன்று மண்டலங்கள் இருக்கின்றன. நாம் அதில் நுழைந்து செல்ல வேண்டும்.     

காந்தி      :      குரலே, அதோ என்ன அது? மேகக் கூட்டங்கள் மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டு இவ்வளவு உயரத்தில் எப்படி மேகங்கள் இருக்க முடியும் என்று கூறமுடியுமா?           

குரல்       :        வாழ்க்கையின் குழம்பிப்போன கடவுள்கள் அவை. மேலும் இந்த கடவுள்களை தொற்றிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் தியானம் என்ன என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு பேரொளியின் வாயில்படி வரைகூட வரமுடியாமல் நின்று விட்டவர்கள்.    

காந்தி      :        நான் இவர்களுடன் இருக்க வேண்டுமா?              

குரல்       :        நாம் முதல் திரையை ஊடுருவி வந்துவிட்டோம்!

 காந்தி     :        ஓ, என் குரலே! பேரொளி எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது?              

குரல்       :        இன்னும் ஒரு போர்வைத் திரை அதன்முன் உள்ளது. இதோ பார், நாம் அதை ஊடுருவிச் செல்கிறோம். 

காந்தி      :        என்ன அங்கே, இலேசான மேகங்கள் போன்று ?      

குரல்       :        தியானம் என்ன என்று அறிந்திருந்த ஆன்மாக்கள் அவை. எனினும் மகா அமைதியினுள் போகும் வழியைக் கண்டு கொள்ள இயலாதவை. இந்த உயரத்தில் இவை இலேசான மேகங்களாக இப்போது நின்று கொண்டிருக்கின்றன. 

காந்தி      :        நான் இங்கு இந்த ஆத்மாக்களுடன் தான் இருக்கப் போகிறேனோ?              

குரல்       :        நாம் தொடர்ந்து ஊடுருவிச் செல்ல வேண்டும்.       

காந்தி      :        மூன்று அடுக்கு போர்வை மண்டலம் கிழிந்து விட்டது. ஓ, என்னைக் காப்பாற்று என்குரலே! எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது இந்தப் பேரொளி? 

குரல்       :        (சிரிக்கிறது) அந்த ஒளி சாத்வீகமானது!.      

காந்தி      :        என்னை சுட்டு எரிக்கும் பயங்கரமான ஒன்றாக அது இருக்கும்போது எப்படி அது சாத்வீகமாக இருக்க முடியும்?      

குரல்       :      அது உன்னை சுடுகிறது. ஆனால் அதில் நீ தீய்ந்துபோகமாட்டாய். பயங்கரமாக இருந்தாலும் அந்த ஒளி சாத்வீகமானது. மேலே அண்ணாந்து பார், காந்தி!     

காந்தி      :        முடியவில்லை என்னால், கண்களை ஒளி குருடாக்குகிறது.       

குரல்       :        உன்னால் முடியும், கரம்சந்த் காந்தி!   

காந்தி      :      எவ்வளவு சாத்வீகமாக ஒளி இருக்கிறது? எவ்வளவு பயங்கரமாகவும் இது இருக்கிறது? அது குளிர்ச்சியான ஒரு நெருப்பு! அமைதியான ஒளியால் ஆன புயல்! இவ்வாறான ஒளியை நான் இதுவரை என் வாழ்வில் கண்டதில்லை, என் குரலே!       

குரல்       :        பயணத்தைத் தொடர்ந்து மேலே போக வேண்டும் காந்தி !  நாம் செல்லவேண்டிய பாதை மிக நீளமானது. இன்னும் அரை வினாடிகாலம் தான் எஞ்சியிருக்கிறது.    

காந்தி      :        சற்றுப்பொறு! என் குரலே, நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன். மூச்சு திணீறுகிறது. கண்கள் சக்தியை இழந்துவிட்டன. எதிரில் உள்ள வெளிச்சவெளியில் கறும் புள்ளிகளைக் காண்கிறேன். 

குரல்       :        (சிரித்து) அவை கரும்புள்ளிகள் அல்ல காந்தி, நட்சத்திரங்கள். 

காந்தி      :        கரு நட்சத்திரங்கள்!!!

குரல்       :        பேரொளியின் முன் இருண்டிருக்கும் நட்சத்திரங்கள். சிந்தனை மனதை ஒருநிலையில் நிறுத்தி தியானம், பொறுமையைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் வாயிலாக அமைதி மண்டலத்தை அடைந்த ஆன்மாக்கள் அவை. நிரந்தரமாக மௌன நட்சத்திரங்களாக இங்கு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.

காந்தி      :        இங்கேயே இருந்துவிட அனுமதிப்பாயா, என்குரலே!      

குரல்       :        நாம் இவற்றைக் கடந்து இன்னும் மேலே போக வேண்டும்.      

காந்தி      :        அங்கே என்ன இருக்கிறது? 

குரல்       :      (லேசாகச் சிரித்து) அங்கு நுழைவாயில் ஒன்று இருக்கிறது.     

காந்தி      :      நுழைவாயிலா?   

குரல்       :        நுழைவாயிலுக்கு பின்னால் பெரிய பணியாளர்கள் இருக்கிறார்களாம். முதலில் அவருடைய இருதயத்தினுள் இருந்து வெளியே சென்று மீண்டும் அவரிடமே அழைக்கப்பட்ட தியாகிகளாக!      

காந்தி :      பெரிய பணியாளர்கள் இருக்கும் இடத்திற்குள் நுழைய எப்படி எனக்குத் தைரியம் வரும்? நான் மிகவும் பலஹீனமானவன்  கோழை! மோசமானவன். பல முக்கிய சந்தர்ப்பங்களின் நான் ஆத்ம பலமின்றி பலஹீனமாகச் செயல் பட்டிருக்கிறேன். அவர்களின் கால்களைத் தொட்டு முத்தமிடக் கூட அருகதையில்லாதவன்.   

குரல்       :        நீ பலஹீனமானவனாக இருந்திருக் கலாம். முக்கியமான சந்தர்ப்பங்களில் ஆத்மபலமின்றி நீ செயல்பட்டிருக்கக் கூடும். ஆனால் உன் மனோதிடம் உறுதியாகத்தான் இருந்தது. அங்கே, மேலே ஒளியில் உள்ள அவர், இக்காலத்தில் உன்னைவிடச் சிறந்த தூதுவன் ஒருவனைக் காணவில்லை என்பதை மட்டும் நான் அறிவேன். உன் ஆயுளின் முடிவின் மூலம் நீ ரட்சிக்கப் பட்டிருக்கிறாய்! 

                              ஆனந்தப்படு, மகாத்மா! அங்கே பார்! கதவு தானாகவே திறந்து கொள்கிறது!  

காந்தி      :        உன்னைப் பின்பற்றி வருகிறேன், என் குரலே!       

                              (லேசாக இசையை புகுத்தவும்)    

குரல்       :  வேகமாக, இன்னும் வேகமாக! கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்!      

                              அவை உன் காலடியில் வீழ்ந்து பெரும் ஒளியில் மினுமினுப்பதைப் பார்.      

                           சொர்க்கத்தின் அளவை நிர்ணயிக்கும் சித்திரங்களைப் பார்!                அந்த வெண்ணிற நதியை – உங்கள் அந்தணர்களால் ஆகாய கங்கை என்று அழைக்கப்படும் அந்த வெண்ணதியைப் பார்!        

                              பலகோடி ஆண்டுகளாக இருந்து கொண்டு  பூமியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்காகவும் இனி பிறவி எடுக்கப் போகிறவர் களுக்காகவும் முடிவில்லாத பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அந்த மாபெரும் நட்சத்திரங்களைப் பார்! |   

                              (இசை முடிவடைகிறது)     

காந்தி      :        யாராவது அவர்களின் பிரார்த்தனையைக் கேட்கிறார்களா?     

குரல்       :        இல்லை என்றால் பிரார்த்தனை செய்ய அனுமதி கிடைத்து இருக்குமா?     

காந்தி      :        நான் வேண்டிக் கொள்வதற்கு அனுமதி உண்டா ?            

குரல்       :        மற்றவர்களின் நலனுக்காகக் கெஞ்சி, பரிந்து பேசுபவர்கள் வாழும் மண்டலத்தின் வழியாகப் போகும் வரை அனுமதி இருக்கிறது. 

காந்தி      :        அதற்குப் பின்பு – – – ?               

குரல்       :        எனக்குத் தெரியாத ஒன்று!      

காந்தி :        அப்படி என்றால் பிரார்த்தனை செய்ய எனக்கு விருப்பமாக இருக்கிறது.

குரல்   தாராளமாக காந்தி! மோகன்தாஸ் கரம்சந்த் . . . நீ பிரார்த்தனை செய்! இன்னும் கால் வினாடி நேரம் உனக்கு இருக்கிறது.

காந்தி      :        ஓ, என் குரலே, என் கைகளை அசைக்க முடியவில்லையே! பிரார்த்தனை செய்வதற்கு என் கைகளை ஒன்றாகக் கூப்பிக் கொள்ள முடியவில்லையே!      

குரல்       :        நான் இப்போது உன் கைகளைத் தொடுகிறேன். இப்போது அவை பலமடைந்து விட்டன.

காந்தி :        என் உதடுகளை அசைக்க முடியவில்லையே!      

குரல்       :        நான் உன் உதடுகளில் முத்தமிடுகிறேன். இப்போது அவை பலமடைந்து விட்டன. 

காந்தி      :        கண்கள் பழுதடைந்து இருக்கின்றனவே! பேரொளியை என்னால் பார்க்கமுடியவில்லையே!   

குரல்       :        உன் கண்களை முத்தமிடுகிறேன். இப்போது நீ பேரொளியை பார்க்கமுடியும்.      

                              (இடைவெளி)    

காந்தி      :        (மெதுவாக) நீ . – . உன்னை எப்படி அழைக்கவேண்டும் என்று சொல்கிறாய்?    

குரல்       :        பேரொளியில் உள்ளவனே!       

காந்தி      :        பேரொளியில் உள்ளவனே! நீ என்னை உன்னிடம் அழைத்துக் கொண்டிருக்கிறாய்! உன் குரலை என் இருப்பிடத்திற்கு அனுப்பிவைத்தாய்!    

                              பல முக்கிய விஷயங்களில் அவைகளைத் தீர்மானிக்க வேண்டிருந்த வேளைகளில் நான் உறுதி படைத்த மனதுடன் செயல் படவில்லை.

 நான் பலஹீனமானவன், நான் அற்ப உள்ளம் படைத்தவன்,

உன்முன் இருக்கும் உயர்ந்த நட்சத்திரங்கள் முன்பும் நான் எவ்விதமான கருணைக்கும் லாயக்கற்றவன்.  

                              என்னுடைய மனோதிடத்திற்காகவும் எனக்கு தகுதியற்ற முறையில் மரணம் நேர்ந்த விதத்திற்காகவும் மட்டுமே கௌரவிக்கப் பட்டிருக்கிறேன்.       

                              என்னிடம் கருணைகாட்டு, பயங்கரமான பேரொளியே!        

                              ஆனால் தகுதிகள் ஏதும் இல்லாத, பலஹீனமான உள்ளத்தில் கொடிய எண்ணங்கள் நிறைந்த மனிதனாக நீ என்னை உன்னிடம் அழைத்துக் கொள்ளவில்லை. பதிலாக, தூதனாக அழைக்கிறாய்!  

                              ஓ, ஒளியில் உள்ளவனே!    

                              மனவலியினுடனும், சொல்ல முடியாத துன்பங்களுடனும் எல்லாவிதமான கேவலமான மனநிலைகளுடனும் தற்போது என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லா மனிதர்களையும் என் பலமற்ற கைகளில் ஏந்தி உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.      

                              அவர்களை ஆசிர்வதித்து எந்தவிதத் தடையும் சொல்லாமல் அவர்களை ஏற்றுக்கொள்!        

                              வெறுப்பினால் மட்டும் நிறைந்த, எதையும் புரிந்து. கொள்ளும் திறனற்ற என் கொலையாளியின் ஆன்மாவைக் கொண்டுவந்திருக்கிறேன்.    

                              அவனை ஆசிர்வதித்து எந்தவிதத்  தடையும் சொல்லாமல் அவனை ஏற்றுக் கொள்!  

            பல மடங்கு துன்பங்களை தாங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவை என் கைகளில் ஏந்தி உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.      

                              பட்டினியால் வாடுபவர்களையும் மனவலியினால் வாடுபவர்களையும், விதவைகளையும், பிச்சைக் காரர்களையும், தீண்டத்தகாதவர் களையும் உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.        

                              அவர்கள் எல்லோரையும் ஆசிர்வதித்து தடைஏதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்!        

                              யார் யாரெல்லாம் வன்முறைக்கு ஆளாக்கப் படுகின்றார்களோ அவர்களை எல்லாம் உன் முன் கொண்டு வந்திருக்கிறேன்.

           ஏழைகளுக்குள் பரம ஏழைகளானவர்களாக இருப்பவர்களையும் உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.       

                              அவர்களை ஆசிர்வதித்து எந்தத் தடையும் சொல்லாமல் அவர்களை மிக்க அன்புடன் ஏற்றுக் கொள்!    

                              உன் மாபெரும் தூதர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நான் மிகச் சாமானியன் என்று எனக்குத் தெரியும்.  

                              ஆனால் என் காலத்தில் இருந்த துயரங்களும் துன்பங்களும் அவர்கள் காலத்தில் இருந்ததை விடக் கொடியவை.       

                              ஓ, ஒளியில் இருப்பவனே! ஒரு புதிய தூதனை உன் இதயத்திற்கு ஏற்ற ஒருவனை அனுப்பிவை!   என்னை விடப் பலமுள்ளவனை என்னைவிடத் தைரியசாலி ஒருவனை அனுப்பிவை!    

                              உன் ஒளியைப் போல் சாந்தமானவனாகவும் பயங்கரமானவனாகவும் உள்ள ஒருவனை அனுப்பிவை!  

                              அப்படிப்பட்ட ஒருவன் கால்களைத் தொட்டு முத்தமிட வேண்டும்!      

                              பின்பு அமைதியாகவும் ஆனந்தமாகவும் வெறுமையில் என்னை நானே கரைத்துக் கொள்வேன்!        

                              ஓ, ஒளியில் உள்ளவனே, என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்!    

                               (மெல்லிய குரலில்) என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்!    

                              (மிக மெல்லிய குரலில்) என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்!    

                              மணி ஓசை, உரக்க, எதிரொலியுடன்      

                              இடைவெளி     

அறிவிப்பாளர் அந்தச் சிறிய பறவை வெண்மேகத்தினுள் உட்புகுகிறது! யமுனை நதி மீண்டும் பேரிரைச்சலுடன் ஓடத் தொடங்கியது. காந்தியின் தலை சற்றுத் தாழ்ந்து சாய்ந்தது! அவர் வீழ்ந்து படுத்திருந்த மண்மேடு சுக்கு நூறாக உடைந்து சிதறியது.       

                              பண்டிட் நேரு டாக்டரைப் பார்த்தார்! அவர் லேசாகத் தலையை ஆட்டினார்!       

                              உடனே பண்டிட் நேரு எழுந்து நின்றார்.       

நேரு :        என் குழந்தைகளே! எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை! மகாத்மா காந்தி, நம் தந்தை மரணம் எய்திவிட்டார்!       

                              (பக்திப் பாடல் இசை) 

 

முற்றும் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.