மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

கொரானா காலத்தில்  புத்தகக் கண்காட்சி ! 

நடத்த முடியுமா? 

திரை  அரங்குகளைத் திறக்கவே உன்னைப் பிடி என்னைப் பிடி என்றிருக்கும் இந்தக் காலத்தில் திமு திமு என்று ஆட்கள் குவியும் புத்தகக் கண்காட்சியை  எப்படி நடத்துவது ? 

மக்கள் எப்படி வருவார்கள்? 

அரசு அனுமதி வழங்குமா? 

வழங்கும் !

காரணம் இது  மெய் நிகர் புத்தகக் கண்காட்சி ! 

VIRTUAL BOOK FAIR  !!!!

 

 

இதைக் கொண்டுவருபவர்கள் 

மற்றும் பலர்! 

இந்த மெய் நிகர் கண்காட்சி எவ்வாறு செயல்படப்போகிறது என்ற ஒரு கருத்துப் பறிமாற்றத்திற்கு செப்டம்பர் 26 அன்று நமது குவிகம் சார்பில் ஏற்பாடு செய்தோம். 

சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தியும் அவரது புதல்வர் கார்த்திகேயனும் கலந்துகொண்டு இணையம் மூலம் எப்படி  இந்தப் புத்தகக் கண்காட்சி செயல்படும் என்பது பற்றி  ZOOM மூலம் விளக்கினார்கள் ! 

அமேசான் போன்ற மின்வணிக இணைய தளங்களில் புத்தகங்களை விற்பதில் பலவித பிரச்சினைகள் இருப்பதாக புதிப்பாளர்கள் கருதுகிறார்கள்.  அதில் குறைந்த விலை உள்ள புத்தகங்களைப் பதிவு செய்து விற்றால் நஷ்டம்தான் வரும்.   மேலும்  விற்பனைத்தொகை உடனே வராது.

புத்தகக் காட்சிக்குச் செல்ல இயலாதவர்கள், பல்வேறு காரணங்களால் அதைத் தவறவிட்டவர்கள் எதிர்காலத்தில் இந்த வசதியை அதிகம் பயன்படுத்திக் கொள்வார்கள்.

 இருந்த இடத்திலிருந்தே அவர்கள் புத்தகங்களை வாங்க இந்த ஏற்பாடு வசதியாக இருக்கும்.

வருடத்தின் 365 நாட்களிலும் ஒரு நாளின் 24 மணி நேரமும் இது செயல்பாட்டில் இருக்கும் என்பதால் எப்போது நினைத்தாலும் புத்தகங்களை வாங்கலாம்.

பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை இந்தத்  தளத்தில் விற்க 10 புத்தகங்களுக்கு 3000 ரூபாய் செலுத்தவேண்டும். 1500 புத்தகங்களுக்கு 50000  ரூபாய் செலுத்தவேண்டும்.   

மெய்நிகர் புத்தகக் காட்சியில் அச்சுப் புத்தகம், மின் புத்தகம், ஒலிப் புத்தகம் என்று முழுவதுமே புத்தகம் விற்பனை மட்டுமே நடைபெறும். அதைப் பற்றிய செய்திகள் மட்டுமே இடம்பெறும். அதனால் புத்தக விற்பனை அதிக அளவில் நடைபெறும்

பதிப்பாளர், விற்பனையாளர், வாசகர் இவர்களுக்குப் பாலமாக இந்த அமைப்பு இருக்கும்.

இதில் பங்கேற்கும் அனைவருக்குமே தனைத்தனியாக வலைதளங்கள் இருக்கும். புத்தகங்கள் விற்ற தொகை அவரவர் வங்கிக் கணக்கிற்கு உடனே போய்ச் சேர்ந்துவிடும். அதற்குத் தேவையான கட்டண நுழைவு வாயில் வசதி (payment gateway option) ஒருங்கிணைப்பு (integration) இருக்கும்.

கொரானாப் பெருந்தொற்று காலத்தில் முன்னைவிட இணையம் வழியாகப் புத்தகங்கள் வாங்கும் பழக்கம் கணிசமான அளவு அதிகரித்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. வருங்காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்பதால் அந்த வாய்ப்பை அனைவரும்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக வாசிப்புத் தளத்தை விரிவாக்குவதுதான் இதன்  முதன்மை நோக்கம்.

மெய்நிகர் புத்தகக் கண்காட்சி  அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் !

கீழ்க்கண்ட சுட்டியில் மெய்நிகர் புத்தகக்காட்சி குறித்த அனைத்து தகவல்களையும் பதிவேற்றப்பட்டுள்ளன. 

 http://thevirtualbookfair.com/

1) Technical Advantages :
http://thevirtualbookfair.com/adv-tam.html
http://thevirtualbookfair.com/adv-eng.html

2) Trade Benefits :
http://thevirtualbookfair.com/beni-tam.html
http://thevirtualbookfair.com/beni-eng.html

3)Subscriber Guidelines :
http://thevirtualbookfair.com/subs-tam.html
http://thevirtualbookfair.com/subs-eng.html

4)FAQs:
http://thevirtualbookfair.com/faq-tam.html
http://thevirtualbookfair.com/faq-eng.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.