ஸாம்பஸதா சிவ…!
கல்யாண விருந்து நடந்து கொண்டிருந்தது. நானும், என்
சுட்டி மகள் மிதிலாவும் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருந்-
தோம். மிதிலாவுக்குப் பக்கத்தில் நெற்றியெல்லாம் விபூதி
இட்டுக் கொண்டு சிவப் பழமாக ஒரு பெரியவர் உட்கார்ந்து
கொண்டிருந்தார்.
‘ஸாம்பஸதா சிவ.. ஸாம்பஸதா சிவ.. சம்போமகாதேவ
ஸாம்பசிவா.. ஸாம்ப ருத்ர மகாதேவா.. ஸம்போருத்ர மகா-
தேவா..’ என்று அவர் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த மிதிலா, ‘ஸாம்பஸதா
சிவ.. ஸாம்பஸதா சிவ…’ என்று அவளும் சொல்ல ஆரம்-
பித்தாள். மகிழ்ச்சியோடு அவளை ஊக்குவிக்கும் விதமாக
அந்தப் பெரியவரும் அவளுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
பரிமாறிக் கொண்டிருந்த சிப்பந்திகள், சாம்பாரை
ஊற்றிக் கொண்டே வந்தார்கள்.
‘ஸாம்பஸதா சிவ.. ஸாம்பஸதா சிவ ஸம்போ மகாதேவ
ஸாம்ப சிவா.. ‘ என்று கூறிக் கொண்டிருந்த மிதிலா சிறிது
நிறுத்தி, ‘ஸாம்பார் ஊத்தற மகாதேவா.. இங்கேயும் கொஞ்-
சம் ஊத்து மகாதேவா’ என்றாளே பார்க்கலாம்..
அந்த ஹாலில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு
நேரம் ஆயிற்று.