மனிதநேயம் வளர்ப்போம்-  ‘கவி ஞாயிறு’ துரை. தனபாலன்

             

Image result for மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி  மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்Image result for மனிதநேயம் வளர்ப்போம்

வீட்டினிலே பெற்றோரைப் போற்றிவைக்க இயலாது 

வேறெங்கோ தள்ளிவைக்கும் வீணர்களின் இடையினிலே

நாட்டினிலே அரசியல்முன் னேற்றமெனும் வேட்டையிலே  

நற்குணமாம் பண்பிழக்கும் நயவஞ்சகர் நடுவே

ஏட்டினிலே பேர்வரவே ஏராளம் செலவழித்து

இல்லாதார்க் குதவாத இருளோர்கள் இருக்கையிலே  

மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி 

மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்

 

ஏடெடுத்துக் கல்விகற்று ஏற்றமுற்ற பின்னாலே 

எல்லோரும் நலம்வாழ எண்ணாதோர் மனந்தெளிய  

பாடுபட்டு உழைப்பாலே பாழ்நிலத்தைச் சீராக்கும்

பாட்டாளியைப் போற்றாத பணக்காரர் பரிவுகொள

காடுவயல் கழனியிலே உழல்கின்ற உழவரது

நீடுதுயர் நீக்காத ஆட்சியினர் நெறியுணர

மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி 

மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்

 

தனித்தமிழில் பேசாமல் தமிங்கிலத்தைப் பேசுகின்ற

தமிழர்தம் அறிவினிலே மொழிநேயம் வளர்ப்போம்

தமிழ்பேசும் அனைவருமே தமிழரெனும் உணர்வில்லா

சாதிமத வெறியரிடை இனநேயம் வளர்ப்போம்

காடுகளில் ஆறுகளில் காணுகின்ற இயற்கைவளம்

கருதாத மூடரிடம் புவிநேயம் வளர்ப்போம்

மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி 

மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்!

                                                                          

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.