குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-                                           

குழந்தைப் பாடல்கள் - பூஞ்சிட்டு

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  1. பிறந்த நாள் !

மின்னம்பலம்:சிறப்புப் பார்வை: ஏன் பிறந்த நாள் கேக்கில் மெழுகுவத்தி ஏற்றுகிறோம்?

பிறந்த நாள் கொண்டாட வாங்க – என்

வீட்டுக்கு எல்லோரும் வாங்க !

இனிப்புகள் தருவாள் அம்மா –

சேர்ந்து சுவைக்கலாம் வாங்க !

 

கோவிலுக்கு போகலாம் வாங்க !

சேர்ந்து கும்பிடலாம் வாங்க !

நல்லபடி வாழனும் என்று – நாம்

அனைவரும் வேண்டலாம் வாங்க !

 

நண்பர்கள் எல்லோரும் வாங்க – நாம்

குஷியாய் இருக்கலாம் வாங்க !

வேடிக்கை விளையாட்டு எல்லாம் – நாம்

சேர்ந்து ஆடலாம் வாங்க !

 

கேக்கு உண்ணலாம் வாங்க – நீங்க

கேக்கறதை தருவேன் வாங்க !

பாட்டு பாடலாம் வாங்க – சேர்ந்து

ஆட்டம் போடலாம் வாங்க !

 

அல்லி, ரங்கா, ரமேஷ், துர்கா –

அனைவரும் வீட்டுக்கு வாங்க !

ஆண்டுக்கு ஒருமுறை வரும் இந்நாள் –

சேர்ந்து கொண்டாட வாங்க !

 

  1. வேப்ப மரம்

விதையாகும் கதைகள்: உதிராத கடைசி இலை! - வத்திக்கான் செய்திகள்

எனக்கு பிடித்தது வேப்ப மரம் !

என் நாட்டில் எங்கும் வேப்ப மரம் !

கசப்புகள் நிறைந்த வேப்ப மரம் !

மருத்துவ குணங்களும் நிறைந்ததுவாம் !

 

எங்கோ தொடங்கும் ஒரு காற்று –

வேப்ப மரக் கிளை நுழைந்து வரும் !

மூச்சை முழுதாய் விட்டுப் பார்த்தால்

மனமும் உடலும் மலர்ந்து விடும் !

 

வயிற்றுப் பிரச்சினை வந்து விட்டால்

வேப்பங் கொழுந்தே மருந்தாகும் !

வேப்ப மர நிழலில் போய் நின்றால்

வெய்யில் நம்மை வாட்டாதே !

 

வேப்பம் பூவைப் பார்த்து விட்டால்

பாட்டி எடுத்து வைத்திடுவாள் !

பாட்டி கையால் ரசம் செய்தால்

பத்து ஊருக்கு மணந்திடுமே !

 

அம்மை போன்ற நோயைக் கூட

வேப்ப இலையால் விரட்டிடுவோம் !

அம்மா போல் எனக்கு வேப்ப மரம் !

அரவணைக்கும் என்னை வேப்ப மரம் !

 

வேப்பங்காய் போல் எதுவேனும்

இளமையில் இருப்பது கண்டீரோ ?

பழுத்து விட்டால் வேப்பம் பழமும்

இனிக்கும் என்பதை அறிவீரோ ?

 

மரமே ! மரமே ! வேப்ப மரமே !

என் வீட்டில் என்றும் இருந்து விடு !

தருவேன் ! தருவேன் ! அன்பைத் தருவேன் !

என் நாட்டை என்றும் காத்து விடு !

 

              

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.