‘யுவர் ஆனர்.. அடுத்ததாக நிருபர் மோகனை விசாரிக்க விரும்புகிறேன்’ என்றார் பரந்தாமன்.
‘மோகன்.. மோகன்.. மோகன்..’ என்று டவாலி கத்த அந்த கோர்ட்டே ஆவலால் உறைந்து போயிருந்தது.
மெதுவாகச் சாட்சிக் கூண்டை நெருங்கிய உருவத்தைக் கண்டதும், ‘யுவர் ஆனர்.. திஸ் ஈஸ் அப்சல்யூட் இம்பர்ஸனேஷன்.. இவர் மோகனே அல்ல.. ‘ என்று தன் இருக்கையிலிருந்து குதித்தெழுந்தார் ராமன்.
‘யூ ஆர் கரெக்ட்.. ராமன்.. இவர் முகம் மோகனுடையது அல்ல.. மோகனின் கஸின் சீனுவுடையது… ஆனால் உடம்பும், உயிரும் மோகனுடையதுதான்.. ‘ என்றார் பரந்தாமன்
நகைத்தபடியே.
‘நோ.. ஐ அப்ஜக்ட்… முதலில் இவர் மோகன்தான் என்று நிரூபிக்க வேண்டும்.. அப்புறம்தான் இவரை மோகனாகக் கூண்டில் ஏற்ற முடியும்’
‘என்ன செய்வது..’ என்ற குழப்பத்தோடு ப்ராஸிக்யூடரைப் பார்த்தார் நீதிபதி.
‘யுவர் ஆனர்.. சில விஷயங்களை மனதில் நிறுத்தி இந்த சாட்சியத்தை என் போக்கில் விசாரிக்க விரும்புகிறேன்.. இவர் சாட்சியம் கூறக் கூறப் பல விஷயங்கள் வெளியே வரும்.. உங்களுக்கும் இவர்தான் நிருபர் மோகன் என்று புரியும்.. அத்தோடு அதை ஊர்ஜிதம் செய்ய மற்ற சில எவிடன்ஸ¤களையும் அப்புறமாக சமர்ப்பிக்கிறேன்..’
‘யுவர் ஆனர்.. ஐ அப்ஜக்ட்..’
‘மிஸ்டர் ராமன்.. அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப்
பார்ப்போமே.. ‘ என்ற நீதிபதி பரந்தாமன் பக்கம் திரும்பி ‘வித் தட் ஸ்டிபுலேஷன், ஐ பெர்மிட்.. அப்ஜக்ஷன் ஓவர் ரூல்டு..’ என்றார்.
‘தாங்க் யூ யுவர் ஆனர்.. ‘ என்ற பரந்தாமன் சாட்சிக்
கூண்டில் நிற்கும் மோகனிடம் திரும்பி, ‘மிஸ்டர் மோகன்.. மார்ச் ஆறாம் தேதி நடந்த அந்தக் கோர சம்பவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றைக் கூறுங்கள்.’ என்றார்.
‘சம்பவம் நடந்த மார்ச் ஆறாம் தேதி மாலை ஆறு
மணிக்கு தணிகாசலம் ஸாரின் கஸ்ட் ஹவுஸ் இருந்த ஏரியாவில் ஒரு நண்பரைப் பார்த்து விட்டு அந்த கஸ்ட் ஹவுஸ் இருக்கும் வீதி வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தேன்..அப்போது தணிகாசலம் ஸாரின் பையன் பாபுவின் கார்
என்னைத் தாண்டிப் போய் கஸ்ட் ஹவுஸிற்குள் நுழைந்தது. பாபு காரை ஓட்ட பின் ஸீட்டில் ஒரு பதினைந்து வயதுப் பெண்ணை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு இந்தக் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ராமுவும் சோமுவும் உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண்ணின் முகமும், கைகளும், துணியால் இறுகக் கட்டப்பட்டிருந்தன. இது அசாதாரணமாகப்
படவே நான் அவர்கள் கஸ்ட் ஹவுஸ் பின் பக்க கேட் பக்கம் ஓடினேன்.. கேட் முன்பக்கம் எப்பொழுதும் ஒரு வாட்ச்மேன் உண்டு.. பின்பக்கம் செக்யூரிடி ஏதும் கிடையாது.. அந்தப் பின்பக்க கேட் மூடப் பட்டிருந்தது. அந்தக் காம்பவுண்ட் சுவர் அதிகம் உயரம் இல்லாததால் சுவர் மேல் ஏறி உள்ளே
குதித்தேன்.. குதித்தவன் பின்பக்கமாக உள்ள ஸ்பைடர் ஸ்டெப்ஸில் ஏறி மொட்டை மாடியை நோக்கி மெதுவாக ஏறினேன்.. ஏறிக் கொண்டிருந்தவன் வென்டிலேட்டர், ஜன்னல்
வழியாக உள்ளே பார்த்துக் கொண்டே சென்றேன்.. ஒரு வென்டிலேட்டர் வழியாக உள்ளே பார்த்ததும் அப்படியே உறைந்து நின்றேன்.. அதிலிருந்து பெட்ரூம் நன்றாகத் தெரிந்தது. கட்டிலில் அந்தப் பெண்ணைக் கிடத்தி இருந்தார்கள். அப்பொழுது அவள் வாயில் இருந்த துணியை நீக்கி இருந்தார்கள். அவள். ‘அண்ணா.. அண்ணா.. வேண்டாம் அண்ணா.. என்னை விட்டுடங்கண்ணா..’ என்று கதறிக்
கொண்டிருந்தாள். எனது வீடியோ காமிராவை எடுத்து அங்கே நடந்த அந்தக் கோர சம்பவத்தை அப்படியே படமாக்கினேன். பிஞ்சு உடல் மூன்று ஆண்களின் ஆளுமை தாங்காமல் அப்படியே தளர்ந்து சரிந்து விட்டது.
‘டேய்.. செத்துட்டாடா’ என்றான் சோமு.
‘மூன்று பேர் முகங்களிலும் கிலி படரத் தொடங்கியது.
‘அந்தக் காட்சியைப் பார்த்து உறைந்து நின்ற நான், சிறிது கவனக் குறைவாக அந்த வென்டிலேட்டரின் கதவைத் தட்ட, அது சிறிது சத்தம் செய்ய, குற்றவாளிகள் மூவரும் வென்டிலேட்டர் பக்கம் திரும்பி நோக்கி என்னைப் பார்த்து விட்டார்-
கள்.
‘டேய்.. அது அந்த நிருபர் மோகன் இல்லே.. அவனை
விடக் கூடாது. பிடிங்க…’ என்று கத்தினான் பாபு.
‘மூவரும் ரூமை விட்டு வெளியே வந்தார்கள்.
‘நான் ஸ்பைடர் ஸ்டெப்ஸில் சீக்கிரமாக இறங்கி வீதியிலே ஓட ஆரம்பித்தேன். அவர்கள் மூவரும் என்னைத் துரத்திக் கொண்டு வந்தார்கள்.
‘இரவு கவியும் நேரமாதலால் ரோட்டிலே கூட்டமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒவ்வொருவர் போய்க்கொண்டிருந்தார்கள். சிறிது தூரம் ஓடியதும் எதிர்ப்பக்கமாகப் பார்த்தால் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நாலு கூலிப்-
படையாட்கள் மரக் கட்டைகளோடு நின்றிருந்தனர். பாபு டெலி·போன் செய்து அவர்களை வரவழைத்திருக்க வேண்டும். முன்னால் அந்த நால்வர். பின்னால் குற்றவாளிகளான
இந்த மூவர்.
‘இனி தப்பிக்க வழியில்லை’ என்று நன்றாகப் புரிந்தது. நல்ல வேளையாக நான் அவர்களையும், அந்தக் கொடூர சம்பவத்தையும் பார்த்ததைப் பார்த்தார்களேயொழிய, நான்
வீடியோ எடுத்தது அவர்களுக்குத் தெரியாது. நான் மெதுவாக அந்த ரோட்டின் புதர் மண்டிய ஒரு பக்கம் நகர்ந்து அந்த வீடியோ காமராவை ஒரு புதரடியில் போட்டு விட்டேன் அவர்கள் எல்லோரும் என்னை அடிப்பதில் குறியாக இருந்தார்களே யொழிய நான் காமிராவை புதரடியில் போட்டதைக்
கவனிக்கவில்லை.
‘நான் மெதுவாக சாலையின் நடுப்பக்கம் வந்து, அடிகள் வாங்கத் தயாரானேன். குங்க்·பூ, கராத்தே, யோகா போன்றவைகளைக் கற்றுப் பயிற்சி செய்து காய்த்துப் போன உடம்பு என்னுடையது. நாலு பக்கங்களிலும் அவர்கள் என்னைத்
தாக்க வலி பொறுக்க முடியாமல் கத்துவது போல் நடித்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் அடி வாங்கி சோர்ந்து விட்டவன் போல் ரோட்டில் தடாரென்று விழுந்தேன்.
‘என்னுடைய நல்ல காலமோ, அல்லது அவர்கள் கெட்டகாலமோ. ஏதோ ஒரு கார் சாலையில் வரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் ‘தலைவா, நாம அடிச்ச இந்த
அடிக்கு அவன் பிழைக்க முடியாது. யாரோ வருகிறார்கள். நாம் ஓடி விடுவோம்’ என்றான் கூலிப்படையாள் ஒருவன்.
‘மாரி… நீ சொல்றதும் சரிதான்.. நீ தூரத்தில் எங்காவது மறைந்து கொண்டு இங்கு என்ன நடக்கிறது ன்னு பார்த்து அப்புறம் வந்து சொல்.. நாங்கள் தப்பித்து ஓடி விடுகிறோம்.’
என்றான் பாபு.
‘போகிற போக்கில் கூலிப்படை ஒருவன் அவன் பாக்கெட்டில் வைத்திருந்த ஆஸிட் பாட்டிலை என் மீது வீசி விட்டு ஓடினான்.
‘அந்த பாட்டில் என்னுடைய தோளில் பட்டு கீழே விழுந்தது என்றாலும் ‘அய்யோ.. ஆஸிட் என் கண்ணிலே பட்டுவிட்டதே.. என் முகமே எரிகிறதே… கண்ணே போய் விட்டதே’ என்று அலறினேன்.
‘ரோட்டிலே வந்த கார் நின்றது. அதிலிருந்த நபர் என்னை நோக்கி ஓடி வந்து என் முகத்தை நிமிர்த்திப் பார்த்து‘மோகன் நான்தான் டாக்டர் சரவணன்.. ஏன்,,என்னாச்சு..?’
என்றார் கலவரத்தோடு.
‘டாக்டர்.. மெதுவா.. நான் அப்புறமா விரிவாகச் சொல்றேன். ரோட்டோரமா ஏதோ தேடுவதுபோல் போய் அந்தப் புதருக்குப் பக்கத்தில் சென்று நான் போட்டு வைத்திருக்கும் வீடியோ காமராவை எடுத்து உங்கள் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வாருங்கள்’
‘அவர் நிலமையைப் புரிந்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் காமிராவை எடுத்துப் பாக்கேட்டில் போட்டுக் கொண்டு வந்தார். பின் அவரும் அவர் டிரைவருமாக
என்னைக் காரில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றனர்.
‘ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் அவரிடம் கிசுகிசுப்பாக, ‘டாக்டர்.. என்னை நேரே ஐ.ஸீ.யூ. க்கு கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு நல்ல நம்பிக்கையுள்ள ஒரு நர்ஸ் மட்டும் இப்போதைக்கு இருக்கட்டும்’ என்றேன்.
‘அதன்படியே என்னை ஐ.ஸி.யூ.வில் கொண்டு கிடத்தினார்கள். அங்கே வேறு யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டு நடந்ததை டாக்டரிடம் கூறினேன். அந்த வீடியோ காமராவை அவருடைய பர்ஸனல் லாக்கரில் பத்திரப்படுத்தி
வைக்கும்படியும் கூறினேன்.
‘டாமிட்.. வீஷ¤ட் நாட் லீவ் திஸ்… வீஷ¤ட் டீச் தெம் எ
லெஸன்’
‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா நான் இந்த முகத்தோட இருந்தா என்னை நிச்சயம் கொன்னுடுவாங்க’ என்றேன்.
‘அப்பொழுது ஐ.ஸி.யூ. வின் வெளியே இருந்த நர்ஸ் கதவைத் திறந்து ‘ஸார்.. உங்களிடம் டாக்டர் மதன் அர்ஜன்டா பேசணுமாம்’ என்றாள்.
‘ஒரு நிமிடம்..’ என்று வெளியே அந்த டாக்டரிடம் பேசி விட்டு வந்த டாக்டர் சரவணன், ‘மோகன் வெரி ஸாரி.. உங்க கஸின் சீனுவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அவனை இரண்டு மணி நேரத்திற்கு முன்னாலே அட்மிட் பண்ணி இருந்தாங்க.
எங்களாலே அவனைக் காப்பாற்ற முடியலே.. ஹீ ஈஸ் நோ மோர்…’ என்றார்.
‘மை காட்.. துன்பத்திற்கு மேல் துன்பம்.. அவன் அங்கேஇறந்து கிடக்கிறான்… எனக்கு இங்கே இப்படி..’ என்று முகத்தை மூடிக் கொண்டு விசும்பினேன்.
‘விசும்பிய நான் திடீரென்று கண்களைத் துடைத்துக் கொண்டு, ‘டாக்டர்.. ஒன்று செய்தால் என்ன.? நான் இந்த முகத்தோட இருந்தா ஆபத்து.. என் சாயல்லேயே இருக்கும் சீனு இறந்து விட்டான்.. என் முகத்தில் ஆஸிட் விழுந்த மாதிரி ஆக்ட் வேறே கொடுத்திருக்கேன்.. என் முகத்திலே சிறு
ப்ளாஸ்டிக் ஸர்ஜரி செய்து என் முகத்தை சீனு முகம் போல் மாற்றி விடுவோம்.. நீங்கள் நாளைக்கு பேப்பர்லே ‘நிருபர் மோகன் மாலை ஏழு மணி அளவில் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக ஆஸ்பத்திரியில்
சேர்க்கப் பட்டார். டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இன்று அதிகாலை ஐந்து மணி அளவில் இறந்து விட்டார்’ என்று நியூஸ் கொடுத்திடுங்க. சீனு குணமாகி டிஸ்சார்ஜ் ஆன மாதிரி
ஹாஸ்பிடல்லே ரிக்கார்டு பண்ணிடுங்க.. நான் வெளியே போய் இந்தக் கேஸ் முடியும் வரை சீனுவாக இருக்கேன்’ என்றேன்.
‘பிரில்லியன்ட் ஐடியா.. இப்பவே உங்க ·பாமிலி எல்-
லோர்கிட்டேயும் பேசி அப்படியே செய்துடறேன்’ என்றார் டாக்டர் சரவணன். அவர் எங்கள் ·பாமிலி டாக்டராகவும் இருந்ததால் எங்கள் குடும்பத்தினர் எல்லோரிடமும் பேசி அப்படியே செய்யவும் முடிந்தது. நான் சீனுவாக டிஸ்சார்ஜ் ஆகி டாக்டர் சரவணனின் தனிப்பட்ட க்ளினிக்கில் போய்ச்
சேர்ந்தேன். சீனுவின் முகத்தில் – உடம்பில் – சிறிது ஆஸிட்டும் தெளிக்கப்பட்டு அவனது உடல் என் குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. இதை வெளியில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த பாபுவின் ஆட்கள் உண்மையென்று நினைத்து
இத்தனை நாட்கள் கவலை இல்லாமல் சுற்றித் திரிந்து கொண்-டிருந்திருக்கிறார்கள். எனக்கு அந்த டாக்டரின் தனிப்பட்ட க்ளினிக்கில் காதும் காதும் வைத்தமாதிரி ப்ளாஸ்டிக் ஸர்ஜரி
நடந்தது. அந்த ஏரியாவில் இருந்த இன்ஸ்பெக்டர் மிகவும் நாணயமானவர். டாக்டர் சரவணன் அவரிடம் விவரங்களைக் கூற. ‘நான் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாகவும், நான் குற்றுயிரும் குலையுயிருமாய் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கே அதிகாலை இறந்து விட்டதாகவும் ரிகார்டு தயாரிக்கப்பட்டு ·பைல் செய்யப்பட்டது. என்னதான் காய்ச்ச உடம்பு ஆனாலும் அவர்கள் அடித்த அடிகளில் உள்காயங்கள் ஏற்பட்டு அதிலிருந்து மீள
எனக்கு மூன்று மாதங்கள் ஆகின’ என்று முடித்தார் மோகன்.
கோர்ட்டில் இருந்த பார்வையாளர்களுக்கு – நீதிபதி,
அட்வகேட் ராமன் உட்பட – ஒரு பெரிய சொற்பொழிவைக் கேட்ட ஒரு உணர்வு.
‘மோகன்.. அந்தப் பெண் கதறக் கதற இந்த சம்பவம்
நடந்தது என்று சொன்னீர்கள்.. அவள் கதறலைக் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்து ஒருவர் கூடவா வரவில்லை…’
‘மிஸ்டர் தணிகாசலம் அந்த இடத்தில் ஒன்பது க்ரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறார். நட்ட நடுவிலே இந்த கஸ்ட் ஹவுஸ். சுற்றிலும் தோட்டங்களும், செடிகளும், மரங்களும். அங்கே உள்ளே போய் விட்டால் என்ன நடக்கிறதென்றே வெளியுலிகிற்குத் தெரியாது.. கத்தினாலும் கேட்-
காது…’
‘ஓ ஐஸீ.. மோகன்.. அந்த சம்பவத்தை பதிவு செய்த
காமராவை கொண்டு வந்திருக்கிறீர்களா..’ என்றார் பரந்தாமன் குதூகலமாக.
‘ஆமாம்’ என்றபடியே அந்த சம்பவம் அடங்கிய பென் டிரைவை கொடுத்தார் மோகன்.
அதை வாங்கி ‘யுவர் ஆனர்.. இதை ப்ராஸிக்யூஷன் எக்ஸிபிட்டாக எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’
‘பெர்மிஷன் க்ரான்டட்..’
‘யுவர் ஆனர்.. இப்பொழுது பதினொன்றரை மணி ஆயிற்று.. நான் இந்த பென் ட்ரைவில் உள்ள பதிவைப் போட்டுக் காட்ட விரும்புகிறேன்.. இந்த கோர்ட கண்ணியத்தையும், மறைந்த ஆத்மாவின் மானத்தையும் மனதிற் கொண்டு அந்தக்
கோர சம்ப்வத்தை நீங்களும், நானும், குற்றம் சாற்றப்பட்ட மூன்று பேரும், அட்வகேட் ராமனும் மட்டும் பார்க்கும்படி உங்களது சேம்பரில் போட்டுக் காட்ட விரும்புகிறேன்..’
‘பெர்மிஷன் க்ரான்டட்.. சரியாக பன்னிரண்டு மணிக்கு அதைப் பார்க்கலாம். அதற்கு கொர்ட் ஸ்டா·ப் ஏற்பாடு செய்வார்கள் ‘ என்றார் நீதிபதி.
‘தாங்க் யூ.. யுவர் ஆனர்.. அதற்குள் நான் இன்னும் மூன்று சாட்சிகளை விசாரிக்க விரும்புகிறேன்..’
‘கோ எஹெட்..’
‘அடுத்து டாக்டர் சரவணனை விசாரிக்க விரும்புகிறேன்..’
டாக்டர் சரவணன் சாட்சிக் கூண்டில் ஏறி அன்று அந்த சாலையில் மோகனைப் பார்த்ததிலிருந்து ப்ளாஸ்டிக் சர்ஜரி ஆகி அவர் குணமாகி வீடு திரும்பும் வரை நடந்ததைக் கூறினார். அவர் கூறியதும், மோகன் கூறியதும் நூற்றுக்கு
நூறு ஒத்துப் போயிருந்தது.
அடுத்து நான் இந்த ஊர்க் கோடியில் இருக்கும் நைட்
க்ளப் மானேஜர் தாமஸை விசாரிக்க விரும்புகிறேன். தாமஸ் சாட்சிக் கூண்டில் ஏறினார். தாமஸைப் பார்த்ததுமே குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மூவர் முகமும் பேயறைந்தது போல்
ஆயிற்று.
அறிமுகக் கேள்விகளுக்குப் பின், ‘ மிஸ்டர் தாமஸ்..
சம்பவம் நடந்த அன்று குற்றம் சாட்டப்பட்ட இந்த மூவரும் உங்கள் க்ளப்புக்கு வந்தார்களா.?’என்று கேட்டார் பரந்தாமன்
‘ஆமாம்.. ராத்திரி ஒரு எட்டு மணி அளவில் வந்திருப்பார் கள். சுமார் பன்னிரண்டு மணி வரை அங்குதான் இருந்தார்கள்
‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்..?’
‘இந்தக் கேஸ் விஷயமாக போலீஸ் வந்து என்னை விசாரித்தபோது நான் அன்றைய மாலை ஸீ.ஸீ.டிவி. ·புட்டேஜைப் போட்டுக் காட்டினேன். அதை நானும் பார்த்தேன்.. அதனால்
எனக்கு உறுதியாகத் தெரியும்..’
‘வெரி குட்.. அந்த பதிவைக் கொண்டுவந்திருக்கிறீர்களா?
‘ஆமாம் கொண்டு வந்திருக்கிறேன்..’
‘யுவர் ஆனர்.. அந்தப் பதிவை இந்தக் கோர்ட்டிற்குப்
போட்டுக் காட்ட அனுமதி வேண்டுகிறேன்..’
‘பெர்மிஷன் க்ரான்டட்..’
அந்தப் பதிவு கோர்ட்டாருக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது.. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நன்றாகக் குடித்து விட்டு வெறியோடு நடன மங்கையர்களை அணைத்துக்கொண்டு ஆடிக் கொண்டிருந்தார்கள்.
‘யுவர் விட்னெஸ்.. மிஸ்டர் ராமன்..’
தலையைத் தொங்கப் போட்டு, அலுப்போடு உட்கார்ந்திருந்த ராமன், ‘நோ க்வெஸ்சன்ஸ்’ என்றார்.
‘யுவர் ஆனர் உங்கள் கேபினில் எல்லாம் ரெடியாக இருக்குமென்று நினைக்கிறேன்.. அந்தக் கோர சம்பவத்தின் பென் டிரைவைப் போட்டுப் பார்க்கலாமா..?’ என்றார் பரந்தாமன்.
‘கோர்ட் ஈஸ் அட்ஜர்ன்ட் டில் ட்வெல்வ் தர்ட்டி.. பன்னிரண்டரை மணிக்கு கோர்ட் மறுபடியும் கூடும்’ என்று எழுந்-
தார் நீதிபதி.
நீதிபதியின் சேம்பரில் நீதிபதி, பரந்தாமன், மோகன், ராமன், குற்றவாளிகள் மூவர், அவர்களை அழைத்து வந்த கான்ஸ்டபிள்கள் இருவர், மூச்சுக்கூட விட மறந்து திரையை
யே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எக்ஸிபிட்டாக கொடுக்கப்பட்டிருந்த பென்டிரைவை ஓட விட்டார் ஒரு ஸ்டா·ப். அந்தக் கோர சம்பவம் திரையிலே விரிந்தது.
அதைப் பார்க்கப் பார்க்கக் குற்றவாளிகளைத் தவிர
மற்றவர்களின் முகங்களில் ஒரு கோபமும், வெறுப்பும், அருவருப்பும் தோன்றி மறைந்தன.
அதைப் பார்த்து முடித்த நீதிபதி குற்றவாளிகளைப் பார்த்தார். அவர் முகத்திலே ஒருவித கோபமும்,வெறுப்பும் தெரிந்தது. குற்றவாளிகள் முகத்திலே மாட்டிக் கொண்டோமே என்ற ஒர் உணர்வு தோன்றி மறைந்ததேயன்றி ஒரு குற்ற உணர்வோ பச்சாத்தாபமோ தென்படவில்லை.
பன்னிரண்டரை மணிக்கு கோர்ட் மறுபடியும் கூடியது. டி·பன்ஸ் அடவகேட் ராமனைக் காணவில்லை. முடிவு என்னவாக இருக்கும் என்று யூகித்ததாலோ என்னவோ பார்வையாளர்கள் கூட்டம் பாதியாக இருந்தது.
நீதிபதி பரந்தாமனைப் பார்த்தார்.
பரந்தாமன் எழுந்து, ‘ யுவர் ஆனர் சம்பவம் நடந்த
அன்று குற்றம் சாட்டப்பட்ட இந்த மூவரும் ஊரில்தான் இருந்திருக்கிறார்கள். திருச்சி ஏ.பி.ஸி. லாட்ஜில் அல்ல என்று தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் பார்த்த அந்த வீடியோ பதிவு குற்றம் செய்தவர்கள்
இவர்கள்தான் என்று தெள்ளத் தெளிவாக சந்தேகம் ஏதுமில்லாமல் நிரூபிக்கிறது. அதனால் இவர்களைக் குற்றவாளிகள்
என தீர்ப்பு வழங்கி, அதிக பட்ச தண்டனையையும் வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
‘எனி ஸ்டேட்மென்ட் ·ப்ரம் டி·பன்ஸ் அட்டர்னி’
‘யுவர் ஆனர்.. ஆ·பீஸிலிருந்து அர்ஜன்டா ·போன்
வந்ததால் மிஸ்டர் ராமன் பொக வேண்டி இருந்தது..நோ ·பர்தர் ஸ்டேட்மென்ட்’ என்றார் ராமனின் உதவியாளர்.
‘ஓகே..சாட்சியங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது குற்றவாளிக் கூண்டிலே நிற்கும் பாபு, ராமு. சோமு, இம்மூவரும்தான் குற்றவாளிகள் என்று சந்தேகமே இல்லாமல் ஆணித்தரமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதனால் அவர்-
களை இந்த பாலியல் வழக்கில் குற்றவாளிகள்தான் என்று இந்தக் கோர்ட் தீர்ப்பளிக்கிறது. தண்டனை விவரத்தை அடுத்த வாரம் வியாழக் கிழமையன்று கூறுகிறேன். அது வரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த வழக்கைமிகவும் திறமையாக கையாண்ட பப்ளிக் ப்ராஸிக்யூடர் பரந்தாமனையும், தைரியமாக உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ரிப்போர்டர் மோகன், டாக்டர் சரவணன், அந்தப் ப்ளாஸ்டிக் சர்ஜரி ரகசியத்தை இதுவரைக் காத்து
வந்த அந்த டாக்டரின் அஸிஸ்டென்ட்ஸ் எல்லோரையும் இந்தக் கோர்ட் பாராட்ட விரும்புகிறது. கோர்ட் ஈஸ் அட்ஜர்ன்ட்..’ என்று எழுந்தார் நீதிபதி.
தங்கள் சூழ்நிலையையும் மறந்து கைதட்டினார்கள்
பார்வையாளர்கள். குற்றவாளிகள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
——————————————————-
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:
‘அப்படி அந்தக் கதையில் என்ன இருக்குன்னு, கதையின் ஆரம்பத்தில் ‘கவனம் சிதறாமல் முடிவு வரை படிக்கவும்’ என்று பெட்டிச் செய்தியாக போட்டிருக்காங்க’
‘அந்தக் கதையில் அப்படி ஒன்றும் இல்லை.. படிப்பவர்கள் ஆவலைத் தூண்டி அந்தக் கதையை முழுதும் படிக்கவைக்க எழுத்தாளர் மேற்கொண்ட யுக்தி அது..’
———————————————————-