சுற்றி நில்லாதே போ! பகையே! – கவி ஞாயிறு துரை. தனபாலன்

vel varuguthu vel varuguthu - YouTube

நேர்மையொடு வாய்மையினை நெஞ்சில் ஏற்றி
ஓர்மையது ஓங்கிடவே உள்ளிருள் ஓட்டி
கூர்மையுடை அறிவுடனே குவலயம் போற்றும்
சீர்மையதன் செவ்வியினைப் பெற்றனர் மாந்தர்!
பாரதத்தின் பெருமைகளை அழித்திட எண்ணிப்
பற்றியிங்கு படர்ந்தெம்மைச் சுற்றிடும் அரவே!
சுற்றிநில் லாதே போ! – பகையே!
சுருண்டே வீழ்ந்திடு வாய்!

உழைப்பதனைப் பெருமையென உயர்த்தும் நாட்டில்
ஊராரின் உழைப்பினையே உறிஞ்சி வாழ்ந்து
காலமெலாம் மக்கள்பணம் களவே செய்து
கறைபட்ட குறைவாழ்வே பொதுவாழ் வாகி
ஊழலிலே ஊறியவர் ஓடிவி டுங்கள்
உண்மையது வெற்றிபெறும் உயரிய காலம்
சுற்றிநில் லாதே போ! – பகையே!
சூழ்ச்சிகள் வெல்லா தே!

கலைகளுக்குத் தலைமையெனும் யோகக் கலையும்
கடும்பிணிகள் களைகின்ற மருத்துவக் கலையும்
நிலைபெறவே அவதரித்த சித்தர் பலரும்
நெடுங்காலம் புகழ்சேர்த்த புண்ணிய நாட்டில்
உலகினையே உலுக்கிபல உயிர்களைக் கொல்லும்
நுண்ணியதீக் கிருமியது நொந்திடும் விரைவில்
சுற்றிநில் லாதே போ! – பகையே!
தொற்றினி அற்றிடு மே!

எல்லைதனைக் காத்துநிற்கும் இந்தியப் படையை
எதிர்த்தெவரும் போர்புரிய எண்ணவும் வேண்டாம்
துல்லியமாய்த் தாக்குதலைத் தொடுத்திடும் தீரம்
தொன்புகழைப் பேணிபகை முடித்திடும் வீரம்
எல்லையினை மீறுமொரு தீவிர வாதம்
தொல்லையதைத் துடைத்தொழிக்கும் வல்லவர் கூட்டம்
சுற்றிநில் லாதே போ! – பகையே!
முற்றாய் அழிந்திடு வாய்!

2 responses to “சுற்றி நில்லாதே போ! பகையே! – கவி ஞாயிறு துரை. தனபாலன்

  1. சுற்றிநில் லாதே போ! – பகையே!
    முற்றாய் அழிந்திடு வாய்!
    அருமை அருமை வாழ்த்துகள் தோழர்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.