வண்ணத்தில் தானே இருக்கும், பலவித
வண்ணங்கள் கண்ணைக் கவரும்
விதமாக வளைய வரும் தினமும்
அட
நான் இன்று பார்த்தது
நிறமற்ற வண்ணத்துப் பூச்சி
கருப்பு வெளுப்பில் எப்படி ?
தெரியாமல் துணுக்குற்றேன்
சில மணிநேர சிந்தனைக்கு பின்னே
கருப்பும் வெளுப்பும்
இரு வண்ணம்தானே
மனது சமரசமானது