ஆயுதபூஜை நடந்து
கொண்டிருக்கிறது.
எல்லாக் கருவிகளும்
தொண்டைமான் படைக்கருவிகளாய்
மின்னுகின்றன.
இருசக்கர மற்றும்
நான்கு சக்கர வாகனங்கள்
எல்லாம் சந்தன முகத்துடன்
சிரித்துக் கொண்டு
நெற்றிக் குங்குமத்துடன்
நாணம் காட்டுகின்றன.
அரிவாள் சுத்தி
கத்தி எல்லாம் மீசை
முறுக்கிப்
பயமுறுத்துகின்றன.
புத்தகங்களும் இன்று
ஒருநாள் அரியணை
ஏறி ஆட்சி செய்கின்றன.
கலப்பையும் பரம்படிக்கும்
பலகையும் தார்க்குச்சியும்
இல்லத்தின் இறுதியில்
அழைப்பார்களா
எனக்காத்திருக்கின்றன.
நல்ல கவிதை
LikeLike