நீளமாகப் போய்க்கொண்டிருந்தது
நீல வானின் தொடு வானம்…
நீண்டு கொண்டு போகும் பாதையில்
நீர்ப்பதையில் தொட்டு விட்ட தொடுவானம்….
தேடிப்பார்த்த பாதைகள் பிரிந்து பிரிவுகளாய்
தேர்வு செய்யும் முடிவுக்குள் சிந்தையில்
தேர்ந்த வழியினைத் தெரிந்தெடுத்து சிறகு
தேய்ந்த முன்னேற்றத்தில் ஓடி ஓடி….
நீல வானின் அடி வானம்- இதோ தொடுவானம்
நீரோடையின் சலசலப்பில் சிலுசிலுப்பாய்- இங்கே
நீர்க்கோடாய் வெண்மேகக் கூட்டமாய் சிதறியோட
நீந்தி வரும் நீர்த்திவலைகளில் மூழ்கி எழ முயல…
தொட்டு விட்ட தொடுவானம் கானல் நீராய்
தொடத்தொட நீண்டு விரிந்து கொண்டே போக..
தொலைவானம் தொடாமல் விட்டு விட்டு எங்கே
தொலைந்து போனதோ கைகளை விட்டகன்று…
விடிந்து விட்ட விடியலின் கன்னம் சிவ்ந்த
விடியலின் தொடுவானம் கைகளில் வந்தது போல்
விரிந்து விரைந்து நெஞ்சம் தொட்டது பிரமை
விரைவாய் சென்று தொட்டதென்னவோ தொடுவானமே தான்…