நாட்டிய மங்கையின் வழிபாடு-12 – கவியரசர் தாகூர் –   தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்  

Rabindra Jayanti 2021: Here Are Some Of The Most Famous Works Of  Rabindranath Tagore

Natir Puja (নটীর পূজা) | Rabindranath Tagore | Dance Drama 2019 | Rabindra  mela | Kashishwari Girls - YouTube       

    முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். இளவரசன் அஜாதசத்ரு கேட்டுக்கொண்டபடி அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் அரசன் வசித்துவந்தான். பல காரணங்களால் அரசி லோகேஸ்வரிக்கு புத்தமதத்தில் நம்பிக்கை தளருகின்றது; நகரில் புத்தருக்கெதிராகக் கலகம் மூள்கிறது. வழிபாட்டுமேடை உடைத்தெறியப்படுகிறது.  அரசன் பிம்பிசாரனையும் படுகொலை செய்ததாகப் பேசிக்கொள்கிறர்கள். புத்தரின் எதிரியான தேவதத்தன் அரசன் அஜாதசத்ருவைத் தன்வயப்படுத்த முயல்கிறான். அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியை புத்தரின் வழிபாட்டு மேடையில் நடனமாடச் செய்து  புத்தமதத்தை அவமதிக்க இளவரசிகள் முனைகின்றனர். நகரெங்கும் கலவரம் தலைவிரித்தாடுகின்றது. ஸ்ரீமதியின் பொருட்டு இளவரசிகள் தமக்குள் சண்டையிடுகிறார்கள்.

           புத்தரை வழிபடுபவர்களைக் கொல்ல அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு மேடைமுன்பு நடனமாட வருகிறாள் ஸ்ரீமதி. அவள் பாடியாடத் தொடங்குகிறாள். அவள் கொல்லப்படும் தருணத்தை எதிர்பார்த்து இளவரசிகள் காத்திருக்கின்றனர். அரசி லோகேஸ்வரி முன்னேற்பாடாக விஷத்தைக் கொடுத்து அவளை முன்னமேயே தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகிறாள். ஸ்ரீமதி அதனை மறுக்கிறாள். நடனமாடத் தொடங்குகிறாள்.

           அனைவரும் பீதியுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

                                இனித் தொடர்ந்து படிக்கவும்:  

                           

           ஸ்ரீமதி: எனது இதயம் தெய்வீகமானதொரு வலியில் துடிக்கின்றது; எனது

                      உடல்முழுவதிலும் ஒரு சிலிர்ப்பைச் செலுத்துகிறது.

                      இந்த இணைப்பின் அலைகளினூடே அமைதி ஒரு கடலெனப்

                      பொங்குகிறது; அதன் இதயத்தில்            பேரழகு பிறக்கிறது.

                     எனது புலன்கள், எனது துயரங்கள் அனைத்தும் தங்களது கடைசி

                     வழிபாட்டைத் தொடங்குகின்றன.

                     எனது காணிக்கைகளை மறுத்து என்னை அவமதிக்காதீர்.

                      தங்கள் மீதான எனது அன்பு எனது அசைவுகளில் எழும் இசையில்          

                      பிரவகிக்கின்றது.

           ரத்னாவளி: (திரும்பவும் குறுக்கிட்டு) இதனை நிறுத்து! அவள் தனது ஆபரணங்களை ஒவ்வொன்றாக சிதைந்த வழிபாட்டு மேடையின் மீது எறிகிறாள். அதோ, அவளுடைய வளையல்கள், அடுத்து கழுத்தாபரணம் என எறிகிறாள். அந்த நகைகள் அரண்னைக்குச் சொந்தமானவை, மகாராணி. இது அதிகப்படியான அவமரியாதை. அவற்றைத் திரும்ப எடுத்துக்கொண்டு வா ஸ்ரீமதி, அவற்றை உரிய மரியாதையுடன் வணங்கு!

           அரசி: அமைதி! அவளைக் குற்றம் கூறாதே. அவளுடைய நடன அசைவுகளுக்கு அச்செய்கை தேவையானதே. எனது உடலே இந்த அதீதமான மகிழ்ச்சியில் துடிக்கின்றது. (அரசி தனது கழுத்தணியைக் கழற்றியெடுத்து வழிபாட்டு மேடைமுன்பு வீசுகிறாள்).

ஸ்ரீமதி! நிறுத்தாதே! தொடர்ந்து நடத்துவாய்!

                     (ஸ்ரீமதி தொடர்ந்து பாடி ஆடுகிறாள்)

           ஸ்ரீமதி: நான் தோட்டத்திலிருந்து மலர்களைத் தரவில்லை,

                       நான் காட்டிலிருந்து பழங்களைக் கொண்டு வரவில்லை,

                        புனித நீரை எனது பாத்திரங்களில் நிரப்பவில்லை.

                       அன்பின் ஊற்று என்னுள் பெருகிப் பீறிடுகிறது.

                       எனது கைகால்களுக்கு அதனைத்தாங்கத் திராணியில்லை:

                       அது தங்கள் திருவடிகளை இளைப்பாறும் இடமாகக் கொள்ளட்டும்

                       ஒரு கடைசி வழிபாட்டில் அது ஏற்றுக்கொள்ளப்படட்டும்.

                       தங்கள் மீதான எனது அன்பு எனது அசைவுகளில் எழும் இசையில்

                     பிரவகிக்கின்றது.

           ரத்னாவளி: ஆனால் இது ஒரு போலித்தனமான நடனம். அவள் இப்போது தனது ஆடைகளை ஒவ்வொன்றாகக் களைகிறாள், மகாராணி, பாருங்கள்! கீழே தெரிவது பிட்சுக்கள் அணியும் மஞ்சள் நிற ஆடை. இது அவளுடைய வழிபாட்டு முறையல்லவா? காவலாளிகளே! நீங்கள் இதைப் பார்த்தீர்களா? மகாராஜாவின் ஆணை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

           முதல் காவலாளி: ஆனால் அவள் புனிதப் பாடல்களை உச்சரிக்கவில்லை.

           ஸ்ரீமதி: (முழங்காலிட்டு உச்சரிக்கிறாள்)

                       புத்தரிடமே எனது அடைக்கலம் …….

           இரண்டாம் காவலாளி: (அவளுடைய வாயை மூடியவாறே) அசட்டுத்தைரியம் கொண்ட பெண்ணே! நிறுத்து. இப்போதாவது இதை நிறுத்து, பின்வாங்கு!

           ரத்னாவளி: அரசருடைய ஆணை நிறைவேற்றப்படட்டும்.

           ஸ்ரீமதி: (தனது பாடலைத் தொடர்கிறாள்)

                       எனது அடைக்கலம் புத்தபிரானிடமே!

                       எனது அடைக்கலம் தர்மத்திடமே!

           அரண்மனைச் சேவகிகள்: இத்தனை மூர்க்கமாக இருக்காதே ஸ்ரீமதி, பின்வாங்கு!

           முதலாம் காவலாளி: பைத்தியக்காரப்பெண்ணே! நிறுத்து! சாவின் கோரப்பற்களுக்கு உன்னைக் கொடுத்துக்கொள்ளாதே.

           இரண்டாம் காவலாளி: உன்னிடம் மன்றாடுகிறோம், எங்களிடம் இரக்கம் கொண்டு இதை நிறுத்திக் கைவிடு!

           மற்ற தாதியர்: இது பார்ப்பதற்கு மிகுந்த பயத்தை உண்டாக்குகிறது. நாம் இங்கிருந்து ஓடிவிடலாம்.

                                                     (அவர்கள் ஓடி வெளியேறுகிறார்கள்)

           ரத்னாவளி: அரசருடைய ஆணை நிறைவேற்றப்படட்டும்.

           ஸ்ரீமதி: எனது அடைக்கலம் புத்தரிடமே

                       எனது அடைக்கலம் தர்மத்திடமே.

                       எனது அடைக்கலம் சங்கத்திடமே.

           அரசி: (மண்டியிட்டவாறு)

                       எனது அடைக்கலம் புத்தரிடமே

                       எனது அடைக்கலம் தர்மத்திடமே.

                       எனது அடைக்கலம் சங்கத்திடமே.

                      முதலாம் காவலாளி ஸ்ரீமதிமீது வாளை வீசுகிறான்;

                     அவள் கீழே விழுந்து இறக்கிறாள்.

           அனைத்துக் காவலாளிகளும்: எங்களை மன்னிப்பீர், எங்களை மன்னிப்பீர்! (அவர்கள் அவளுடைய பாதங்களைத் தொட்டு வணங்குகின்றனர்)

           அரசி: (அவளுடைய தலையைத் தன் மடிமீது வைத்துக் கொள்கிறாள்) ஓ நாட்டிய மங்கையே, உன்னிடமிருந்து இந்த பிட்சுணியின் ஆடையை உனது இறுதிப் பரிசாக எடுத்துக் கொள்கிறேன். அதுவே எனது அடைக்கலமாகும். (அவள் பணிந்து வணங்குகிறாள்).

           ரத்னாவளி தன் நிலையிழந்து தரையில் விழுகிறாள்.

           மல்லிகா: (ரத்னாவளியிடம் சென்று) நீ இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?

           ரத்னாவளி: (தனது முகத்தை மறைத்தபடி) இப்போது நான் உண்மையாகவே பயப்படுகிறேன்.

                                ஒரு தூதுவன் உள்ளே நுழைகிறான்.

           தூதுவன்: மகாராஜா அஜாதசத்ரு தாம் உள்ளேவர அரசத்தாயாரின் உத்தரவை எதிர்பார்த்தபடி வாயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்.

           மல்லிகா: நான் சென்று உங்கள் பெயரால் அவரை உள்ளேவரக் கூறுகிறேன்.

                     (மல்லிகா செல்கிறாள்)

           அரசி: எல்லாரும் என்னுடன் சேர்ந்து பாடுங்கள்:

                     (அரசி லோகேஸ்வரி பாடுகிறாள்; அனைவரும் உடன் இணைகின்றனர், ரத்னாவளியைத் தவிர)

                      எனது அடைக்கலம் புத்தரிடமே

                       எனது அடைக்கலம் தர்மத்திடமே.

                       எனது அடைக்கலம் சங்கத்திடமே.

                                (மல்லிகா உள்ளே நுழைகிறாள்)

           மல்லிகா: மகாராஜா திரும்பிச் சென்றுவிட்டார்.

           அரசி: ஏன்?

           மல்லிகா: இங்கு நடந்தவற்றைப்பற்றி அறிந்து கொண்டதும் அவர் பயத்தில் நடுநடுங்கினார்.

           அரசி: யாரைக்கண்டு அவர் பயந்தார்?

           மல்லிகா: இறந்துவிட்ட நாட்டியமங்கையிடம்.

           அரசி: நாம் ஒரு பாடை கொண்டுவந்து அவளை எடுத்துச் செல்வோம்.

                     (ரத்னாவளியைத் தவிர அனைவரும் வெளியேறுகிறார்கள். ரத்னாவளி ஸ்ரீமதியின் கால்களில் மண்டியிட்டுப் பணிந்தபடி பாடுகிறாள்)

           ரத்னாவளி:

                      எனது அடைக்கலம் புத்தரிடமே

                       எனது அடைக்கலம் தர்மத்திடமே.

                       எனது அடைக்கலம் சங்கத்திடமே.

                                                                           (நிறைந்தது)

                                —————————————

                               

எனது குறிப்பு: தாகூரின் நாடகங்களில் மத சம்பந்தமான தத்துவங்களையும் கருத்துக்களையும் அவர் சங்கேதமாகவும் வெளிப்படையாகவும் குறிப்பிடுவதனைக் காணலாம். இவற்றை மனித உள்ளங்களின் நுட்பமான உணர்வுகளுடன் பின்னிப்பிணைந்து அவர் புனையும் எழுத்தோவியங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கும். வாழ்க்கையையும், அதில் நாம் பெரிதெனக் கருதும் அழகு, செல்வம், பதவி ஆகியனவற்றின் நிலையாமையையும் அழகான கவித்துவம் மிகுந்த நுட்பமான கண்ணோட்டத்தில் வழங்குவதில் தாகூருக்கு இணை அவரே.

                      படித்து ரசித்தமைக்கு நன்றி!

 

 

One response to “நாட்டிய மங்கையின் வழிபாடு-12 – கவியரசர் தாகூர் –   தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்  

  1. தாகூரின் அருமையானதொரு காவியத்தை தமிழில் மொழிபெயர்த்து மூல காவியத்தின் சுவைகெடாமல் மேலும் மெருகேற்றி வாசர்களுக்கு விருந்து படைத்த மீனாட்சிக்கு பாராட்டுக்கள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.