பெண்ணே நீ
மஞ்சத்தில் ஆடவர்
கொஞ்சி விளையாடும்
பொம்மை அல்ல!
பெண்ணே நீ
மஞ்சத்தில் மயங்கி
உணர்வில் உறவாடி
உயிரில் கலந்து
கருவைத் தாங்கும்
பிரபஞ்சம் என்னும்
பொன் மகள்!
பெண்ணே நீ
வீட்டில் அடைகாக்கும்
பெட்டைக் கோழி அல்ல
பிரபஞ்சம் வியக்கும்
ஆடும் மயில் !
பெண்ணே நீ
நிற்கும் சிலையோ
ரசிக்கும் கலையோ அல்ல
பிரபஞ்சம் வியக்கும்
வான்புகழ் மழை !
பெண்ணே நீ
மனது வைத்தால்
மனித இதயங்களை
புனிதமாக்கும்
இனிய பிரபஞ்சம் !