உன்னை ஒரு
பலாப்பழமாக உணர்கிறேன்.
அணுகுவதற்குச் சற்று
கடினம்தான்.
சற்றுக் கவனம் பிசகினும்
முள் குத்தும்.
வலித்துக் கொண்டே இருக்கும்
காயம் இல்லையெனினும்
வடு இருக்குமன்றோ?
ஆனால்
உள்ளிருப்பதை எண்ணி
உவகையுடன்
பழகுகிறேன்.
பிளந்து வெயிலில்
வைக்கும் துன்பம்
எனக்கும்தான்
ஏற்படுகிறது.
இருந்துமென்ன?
எல்லாச் சுளைகளும்
எப்போதும்
இனிப்பதில்லையே!