அப்பாவின் பள்ளியறை – கவி. கோ. பிரியதர்ஷினி

அன்புடன் அந்தரங்கம்! | Dinamalar
வேண்டாமென்ற மணவிழாவிற்கு
திருமண பரிசாய்
கன்னத்து தோளோடு
உரிந்தது இரண்டடி
அலங்கார மேடையில்
சத்தமாய் அழுதது மௌனம்
திட்டிக் கொண்டே இருக்கிறார் அப்பா
என் சுயம் கேளாது
வெடிப்புற்ற உதடுகளுக்கு
முத்தம் துப்பியபடி
அழுகையை சுவைத்தது கைக்குட்டை
தயாராகிக் கொண்டிருந்தார்கள்
எல்லாரும்
என் கனவுகளை நறுக்கிக்கொண்டே
தென்படவில்லை இதுவரை
அவரவர் கண்களுக்கு
எனக்குள் மாய்ந்து போயிருந்த
நட்சத்திர பூ ஒன்றை
ஊடலில் கழுத்துகளில் குதித்தபடி
கொத்திக் கொண்டிருந்தன
மணச்சேர்க்கையின் மாலைகள்
வெள்ளையும் சிவப்புமாய்
மேடிட்ட மனக்கோட்டையில்
நழுவியும் கழுவியும்
இரக்கமற்று மறைந்தது
அவன் மேலூறிய அன்பு
சரிந்த பேரன்பிற்காய்
கிழியாமல் வாதிட்டது கண்கள்
அப்பாவின் திசை சாய்ந்து
மலைப்பாம்பை ஒத்து நெழிந்து
கொண்டிருந்தேன்
என் முன் தனல் அதனினும் நான்
கட்டப்பட்டது என் கைகளும் மௌனமும்
நிகழ்வதை துழாவிக் கொண்டிருக்கையில்
உடலும் ஏகியது மஞ்சள் முடிச்சு
அவிழ்ந்திருந்தது என் சரீரம்
என் ஒழுங்கிலிருந்து
விருப்பக் கிளையொடித்து
வேறொரு அறைக்கு
குடிபுகுத்தினார்கள்
இரவெல்லாம் ஏங்கிக்
கொண்டிருந்த வெள்ளந்தியாய்
அழைத்தேன் அப்பாவை
உரிந்த கன்னத்து தோளுக்கு
கசிய கசிய காதல்  ஊட்டி
“சீக்கிரம் உறங்கி
நாளைக்கு பள்ளி செல்
என்றபடியே
பள்ளியறை புகுந்தார் அப்பா
அம்மாவின் அறை பழகிக்கொண்டிருந்தது
அம்மாவை
போலொரு அம்மாவிற்கு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.