மண்டையிலே நுழைய மாட்டேங்குது..!
நான் என் நண்பன் சேகருடன் அவன் வீட்டில் பேசிக்
கொண்டிருந்தேன். என் மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.
‘என்னமோ.. தெரியலேப்பா.. வயசாயிடுச்சுன்னு நினைக்கிறேன்… ஒரே விஷயத்தை எத்தனை முறை படிச்சாலும்,கேட்டாலும் இந்த மண்டையில் நுழைய மாட்டெங்கிறது…’என்றான் நண்பன் திடீரென்று.
என் மகள் மிதிலா அவனையே இரண்டு நிமிடங்கள்
மேலும் கீழுமாகப் பார்த்தாள்.
‘அங்கிள்.. காரணம் ரொம்ப ஸிம்பிள்.. நீங்க புட்டபர்த்தி
சாய்பாபா மாதிரி ஒரு கூடை முடியை தலையில் வளர
விட்டிருக்கீங்க.. நீங்க படிச்சதெல்லாம் மண்டையில் நுழையாம அந்த முடி தடுக்கிறது.. ஒண்ணு பண்ணுங்க.. க்ளீனா மொட்டை அடிச்சிடுங்க.. அப்புறம் பாருங்க.. நீங்க ஒரு தடவை படிக்கும்போதே அதெல்லாம் ஒரு தடையுமில்லாம க்ளீனா டைரக்டா மண்டைக்குள் நுழைந்து விடும்..’ என்றாளே பார்க்கலாம்.
நானும் சேகரும் அயர்ந்து நின்றோம்.