சொல்லிவிடு
என்றாவது ஒரு நாள்
சொல்ல வேண்டும்
அந்த நாளின்
இளங்காலையில்
பவழமல்லிப் பாயைக்
காற்று தொட்டுச் செல்லும்
நம் காடுகளில் கூடுகள்
துறக்கும் பறவைகள்
நம் கிணற்று நீரில்
குடம் நீரள்ளும்
கன்றை அழைத்து
பசுக்கள் கூவும்
செம்பொன்னார் கோயில்
ஸ்வர நாதம்
கூரையெனக் கவிழும்
மரமல்லி மரத்தருகே
சொல்லி விட வேண்டும்..