ஒரு தடவ சொன்னா…..!
என் நண்பன் சேகரைப் பார்க்க அவன் ஆபீஸிற்குப்
போய், அவன் வருகைக்காக அவன் காபினில் உட்கார்ந்திருந்தேன். என் மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.
கோபமும் அலுப்புமாக காபினுக்குள் நுழைந்தான் சேகர்.
‘டாமிட்… இன்காரிஜிபிள்.. ஸ்டா·ப் எல்லோரும் நல்லாப் படிச்சவங்க.. ஆனா, ஒவ்வொரு வேலையையும் நூறு தடவ சொல்ல வேண்டியிருக்கு.. அப்பத்தான் புரிஞ்சுண்டு செய்யறாங்க.. ரொம்ப அவஸ்தைப்பா…’ என்றான் என்னைப்
பார்த்து.
‘கேட்டுக் கொண்டிருந்த மிதிலா மெதுவாகச் சிரித்தாள்.
என்னடி சிரிக்கறே என்ற கேள்விக் குறியோடு கண் புருவங்களை உயர்த்தி அவளைப் பார்த்தேன்.
‘ஒண்ணுமில்லேப்பா.. பாட்சா சினிமாவுலே ரஜினி அங்கிள் எப்பவும் ‘ நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..’என்பார். இங்கே சேகர் அங்கிள் நூறு தடவ சொன்னா ஒரு தடவ சொன்ன மாதிரின்னு தோணுது.. அதை நினைச்சேன்.. சிரிப்பு வந்தது..’என்றாள் சிரித்து கொண்டே..
அந்த இறுக்கமான சங்கடமான நிலமையிலும் எங்களாலும்
சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்..:
ரெண்டு வீடு…!
ஜோதிடரைப் பார்க்க கூட்டம் நிரம்பி இருந்தது.
‘அங்கே முத்ல்லே உட்கார்ந்திருக்காரே.. அவர் இந்த
தொகுதி எம்.எல்.ஏ.. நல்ல செல்வாக்கு உள்ளவர். ஆனா
அவரைப் பத்தி ஒரு ரகசியம் தெரியுமா.. அவர் ரெண்டு
வீடு வெச்சிருக்கார்..’ என்றார் ஒருவர் மெதுவான குரலில்,
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம்.
‘அட நீங்க ஒண்ணு… இப்பப் பாருங்க.. பன்னிரண்டு
ராசிகள் – வீடுகள்… ஒன்பது கிரகங்கள்.. கணக்குப் போட்டு
பார்த்தோம்னா அட்லீஸ்ட் மூணு கிரகங்களுக்காவது ரெண்டு
வீடுகள் இருக்கும். நாம கடவுளா நெனச்சு வழிபடுகிற
கிரகங்களே அப்படி.. ஆ·ப்டர் ஆல் நாமெல்லாம் மனு-
ஷங்க.. விட்டுத் தள்ளுங்க.. கண்டுக்காதீங்க.. ‘
‘ !!! ‘
— சிவமால்.