சிரம் தள்ளிய சரம் என்ற தலைப்பில் உயர்திரு அ கி வரதராஜன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு போனது என்றால் மிகையில்லை.
இந்தத் தலைப்பில் என்ன சொல்லப்போகிறார் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும்போது இலக்குவனைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார்.
முடிவில் இலக்குவன் இந்திரஜித் போர் பற்றிக் கூறும்போது இலக்குவானால் இந்திரஜித்தை வெல்லவே முடியவில்லை என்றும் இராமன் அறத்தின் வழி நின்றது உண்மையென்றால் இந்த சரம் அவன் சிரத்தைத் தள்ளட்டும் என்று ஆணையுரைத்து அம்பு எய்துகிறான் இலக்குவன்.
இந்திரஜித்தின் சிரம் கொய்யப்படுகிறது.
இதனை அவர் முத்தாய்ப்பாகக் கூறியபோது அரங்கமே அதிர்ந்தது.
அவரின் முழு காணொளியை இங்கே கேளுங்கள்!