விண்மீது நோக்கமிருந்தால்
கன வாகும்
வினையதனை உணர்ந்தாலே
வெற்றி யாகும்
கனவதனை நினைவாக்க
துணிவின் துணைநாடும்
நன்னாளில் விழுந்தாலும்
எழுவதுவே முதற்படியின்
முதலாம் அடியின்
முனைப்பாகும் வெற்றிக்கே…
விதையது வீழ்ந்தால் தானே
வீரிய மரமாகும்
விண்ணின் கதிரவனும்
வீழ்ந்து அஸ்தமித்தால்
விடியல் உதயமாகி
வெளிச்ச வெள்ளமாகும்…
வெற்றி பெற்றவர்களின்
வாழ்க்கையக் கேட்டால்
விழுந்து எழுந்த கதைகள்
விரியுமே காவியங்களிலே
விழுந்து எழுந்து ஓடும்
விடியலின் மகிழ்வான
தலைமுறைக்கும் புரிகிறதே
எழுந்தால் தான் வாழ்க்கையாக…
தோல்விகளின் கவிதையே
முதல் வெற்றிப் படியென்றே
தோன்றிய பின்னும்
வீழ்ந்தவர்கள் எழுந்திடாமல்
முயற்சி திருவினையாக்கும்
முற்றும் துறந்த
முனிவரும் தவம் வேண்டி
முதல்வ்னை வேண்டிக்காத்திருக்க..
வீழாதவன் இங்கே நம்மில்
மனிதரில்லை என்பதை
உணராதவர் இப்புவியில்
மரணமின்றி வாழ்வாருண்டோ?
வாழ்வின் வெற்றிக் கண்டோர்
வீழ்ச்சியின்றி வெற்றி
வாகை சூடியதில்லை என்பதை
வாழ்வில் வரிப்போம்
வெற்றி தனைக்கண்டிட
வீழ்ந்திடினும் எழுந்து நின்றே
வசந்த்ங்களை வாழ்வில்
வரவேற்றிடுவோம் வண்ணமாகவே….